சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாகக் குடியரசுத்தலைவர் நியமித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் ராமசாமி சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கந்தசாமி ராஜசேகர் ஆகியோரை சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாகவும், மும்பை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் சைலேஷ் பிரமோத் பிராமே, ஃபிர்தோஷ் பிரோஸ் பூனிவாலா, திரு ஜிதேந்திர சாந்திலால் ஜெயின், ஆகியோர் மும்பை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாகவும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மஞ்சுஷா அஜய் தேஷ்பாண்டேவை 12.08.2025 முதல் ஓராண்டு காலத்திற்கு கூடுதல் நீதிபதியாகக் குடியரசுத்தலைவர் நியமித்துள்ளார்.