தமிழக;ததில் பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில் மாணவர்கள் ஆர்வமுடன் தேர்வு எழுதினர்.
கடந்த 3ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், 11ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியுள்ளது. இந்த தேர்வை தமிழகத்தில் உள்ள 7 ஆயிரத்து 557 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 89 ஆயிரத்து 423 மாணவர்கள், 4 லட்சத்து 28 ஆயிரத்து 946 மாணவிகள் என மொத்தம் 8 லட்சத்து 18 ஆயிரத்து 369 பேர் எழுதுகின்றனர்.
இது தவிர தனித்தேர்வர்களாக 4 ஆயிரம் பேரும், சிறைவாசிகள் 137 பேரும் பொதுத்தேர்வை எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 316 தேர்வு மையங்களில் பிளஸ்-1 பொதுத்தேர்வை மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
தேர்வில் முறைகேடுகளை தடுக்க 4 ஆயிரத்து 470 பறக்கும் படைகளும், தேர்வுப் பணிகளில் 44 ஆயிரத்து 236 தேர்வறை கண்காணிப்பாளர்களும் ஈடுபட்டுள்ளனர். வரும் 27ஆம் தேதி வரை 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவுள்ள நிலையில், முதல் நாளில் தமிழ் உட்பட இதர மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது.