வர்த்தக போர் : ஆட்டம் கண்ட அமெரிக்க பங்குச்சந்தை - சிறப்பு தொகுப்பு!
Jul 29, 2025, 08:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வர்த்தக போர் : ஆட்டம் கண்ட அமெரிக்க பங்குச்சந்தை – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Mar 7, 2025, 06:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மெக்சிகோ, கனடா மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த கூடுதல் வரிகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் மூலம், அமெரிக்கா இந்த மூன்று நாடுகளுடனும் வர்த்தகப் போரை தொடங்கி உள்ளது. ஏன் இந்த 3 நாடுகள் மீது கூடுதல் வரி ? இதனால் யாருக்கு லாபம் ? யாருக்கு நஷ்டம் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

சீனாவில் இருந்தும் மெக்சிகோ மற்றும் கனடா நாட்டு எல்லைகள் வழியாகவும் பல்வேறு போதைப் பொருட்கள் அதிக அளவில் அமெரிக்காவுக்குள் வருகின்றன. அமெரிக்க அரசு பலமுறை எச்சரித்தும் இந்த மூன்று நாடுகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

போதைப் பொருட்களால், அமெரிக்கா தொடர்ந்து பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அமெரிக்காவுக்குள் சட்ட விரோத அகதிகள் மற்றும் போதைப்பொருட்கள் நுழைவதைத் தடுக்க வேண்டும் என்றும் அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

வட அமெரிக்க நாடுகளான கனடா, மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 25 சதவீத வரியும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 35 சதவீதமும் வரியும் விதிக்கப்படும் என்று அதிபராக பதவியேற்றவுடன் ட்ரம்ப் உத்தரவிட்டார்.

இந்த புதிய வரிகள் பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வருவதாகவும் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதற்குப் பின் கூடுதலாக ஒரு மாதம் அவகாசம் அளிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மெக்சிகோ, கனடா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளுக்குமான புதிய வரி விதிப்பு, கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தன. சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை ஊக்குவிக்கும் காரணத்துக்காக, கனடா மற்றும் மெக்சிகோ மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில், போதைக்கு பயன்படுத்தப்படும் மருந்தான ஃபென்டானில் கடத்தலைத் தடுத்து இந்த கூடுதல் வரியை தவிர்க்கும் எந்தவித ஒப்பந்தத்துக்கும் இடமில்லை என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு எதிராக,பரஸ்பர வரிகள் (Reciprocal Tariffs) வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். தங்கள் நடவடிக்கைக்கு எதிர் நடவடிக்கை எடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கைக்குப் பதிலடி கொடுத்துள்ளார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் இராணுவ தளவாடங்கள் வரை அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் சுமார் ஒன்றே முக்கால் லட்சம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீத வரிகளை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

மேலும், சுமார் 7.48 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரிகள் இன்னும் 21 நாட்களுக்குள் விதிக்கப்படும் என்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரிகளைச் சமாளிக்க நாடு தயாராக இருப்பதாக மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய வரிகளுக்கு சீனாவும் உடனடியாக பதிலடி கொடுத்துள்ளது.

அமெரிக்காவின் பொருட்களுக்கு அதிகபட்சம் 15 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்போவதாக சீனாவின் நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், 25 முன்னணி அமெரிக்க நிறுவனங்கள் மீது ஏற்றுமதி மற்றும் முதலீட்டு கட்டுப்பாடுகளையும் சீனா விதித்துள்ளது. அதிபர் ட்ரம்ப் கூடுதல் வரி விதித்த நாடுகளின் முதல் பட்டியலில் இந்தியா இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இந்தச் சூழலில், சீனா, கனடா, மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் மீது அதிபர் ட்ரம்ப் விதித்துள்ள கூடுதல் வரிவிதிப்பால், ஆண்டுக்கு சுமார் 900 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதி பாதிக்கப்படும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். புதியவரி விதிப்பு அமலுக்கு வந்த ஒரே நாளில், அமெரிக்க பங்கு சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால், உணவு,மதுபானம், தொடங்கி,கார்கள் வரை பல பொருட்களின் விலைகள் பன்மடங்கு அதிகரிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்கா வரிகளை விதிப்பதும், அதற்குப் பதிலடியாக சீனா,கனடா,மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளும் அமெரிக்கா மீது வரிவிதிப்பதும் ஒரு உலகளாவிய வர்த்தகப் போரின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது.

Tags: chinaCanadaMexicoUS governmentUS President Trumpdditional tariffs for good exportsillegal refugeesdrugs trafficking
ShareTweetSendShare
Previous Post

BOFORS ராஜீவ் காந்தியின் மெகா ஊழல் வழக்கு : சிபிஐ மீண்டும் விசாரணை!

Next Post

மத்திய தொழில் பாதுகாப்பு படை 56-ஆம் ஆண்டு விழா – அரக்கோணம் வந்தார் மத்திய அமைச்சர் அமித் ஷா!

Related News

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

அலறும் அஜர்பைஜான் : இந்திய ஆயுதங்களை வாங்கி குவிக்கும் ஆர்மேனியா!

குழந்தையில்லா தம்பதியை குறிவைக்கும் கும்பல் : IVF முறையில் பகீர் மோசடி – பரபரப்பு பின்னணி!

நியூயார்க்கை கதறவிட்ட ஷேன் தமுரா யார்? – 5 பேரை சுட்டுக்கொன்ற கொடூரன் – பகீர் தகவல்!

காடுகளின் காவலன் – சர்வதேச புலிகள் தினம்!

வரும் 1ம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் : சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சிவ பக்தராக மாறிய ஜப்பான் தொழிலதிபர் : உத்தரகாண்டில் ஆசிரமம், கோயில் கட்ட திட்டம்!

ஆர்வம் காட்டும் இளைஞர்கள் : தேசிய கொடி பொறித்த பொருட்கள் விற்பனை “ஜோர்”!

இண்டி கூட்டணியினர் மலினமான செயலில் ஈடுபடுவதை கைவிட வேண்டும் : நயினார் நாகேந்திரன்

ஆப்ரேஷன் சிந்தூரை போன்று ஆப்ரேஷன் மகாதேவும் முழு வெற்றி : அமித்ஷா பெருமிதம்!

முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் 2,187 கோடி முறை பயணம் : அஷ்வினி வைஷ்ணவ்

அஜித் குமார் வழக்கு – நீதிமன்றத்தில் சிபிஐ மனு!

திமுக ஆட்சியில் பெண்கள் வெளியில் நடமாடுவதற்கே அஞ்சுகிறார்கள் : நயினார் நாகேந்திரன்

கிங்டம் திரைப்படம் ரஜினியின் படங்கள் போல இருக்கும் : விஜய் தேவரகொண்டா

பயோமெட்ரிக் மூலம் பணப்பரிவர்த்தனை – விரைவில் அமல்!

மதுரை மாநகராட்சியின் 41-ஆவது மாமன்ற கூட்டம் : எம்.பி சு.வெங்கடேசனின் கருத்துக்கு திமுகவினர் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies