தங்கம் கடத்திய புகாரில் நடிகை ரன்யா ராவ் கைது!
Sep 18, 2025, 04:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தங்கம் கடத்திய புகாரில் நடிகை ரன்யா ராவ் கைது!

Web Desk by Web Desk
Mar 6, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

துபாயில் இருந்து தங்க நகைகளைக் கடத்திய புகாரில் கன்னட நடிகை ரன்யா ராவ் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் பிடிக்கப்பட்டார். சுமார் 12 கோடி ரூபாய்க்கு மதிப்புள்ள 14.8 கிலோ தங்க நகைகள் ரன்யா ராவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதன் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

கர்நாடகாவின் சிக்மக்ளூரை சேர்ந்த 32வயதான ரன்யா ராவ், பிரபல கன்னட திரைப்பட நடிகையாவார். கன்னட நடிகர் கிச்சா சுதீப் இயக்கி நடித்த “மாணிக்யா” என்ற படத்தில் சுதீப்புக்குச் ஜோடியாக அறிமுகம் ஆனார். தமிழில், நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக, வாகா திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை ரன்யா ராவ், நடித்திருந்தார்.

நடிகை ரன்யா ராவ், கர்நாடகவில் டிஜிபி அந்தஸ்து உள்ள ஐபிஎஸ் அதிகாரியான ராமசந்திரன் ராவின் வளர்ப்பு மகளாவார். ஐபிஎஸ் அதிகாரியான ராமசந்திரன் ராவ் கர்நாடக காவல் துறையில் Housing Corporation ஹவுசிங் கார்பரேஷனில் பணியாற்றி வருகிறார்.

அடிக்கடி சர்வதேச பயணங்களை மேற்கொள்ளும் நடிகை ரன்யா ராவ், (Directorate of Revenue Intelligence)வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தின் ரகசிய கண்காணிப்பில் இருந்து வந்துள்ளார். கடந்த 15 நாட்களில் மட்டும் நான்கு முறை ரன்யா ராவ் துபாய்க்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நான்காவது முறையாக துபாய்க்குச் சென்று விட்டு, கடந்த திங்கட்கிழமை இரவு, துபாயில் இருந்து, எமிரேட்ஸ் விமானத்தில் பெங்களூரு வந்திறங்கினார் நடிகை ரன்யா ராவ்.

அனுமதிக்கப் பட்டிருந்த அளவைக் காட்டிலும் அதிகமாக நகை அணிந்திருந்த ரன்யா ராவை, வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். ஏராளமான தங்க நகைகளை அணிந்திருந்ததையும், அவரது உடைகளில் தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்ததையும், புலனாய்வு அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்.

ஒவ்வொரு முறையும் துபாய் சென்று, தங்கத்தை கடத்தி வந்த ரன்யா ராவை, ​​கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். அவரிடம் இருந்து 14.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பெங்களுருவில் உள்ள DRI தலைமையகத்துக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை செய்யப்பட்டார்.

முதற்கட்ட விசாரணையில், தன்னை டிஎஸ்பி மகள் என்று கூறிய ரன்யாராவ், தன்னை வீட்டுக்கு அழைத்து செல்ல பெங்களூரு மாநகர காவல்துறையினர் வருவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் யாரும் வரவில்லை. அதன் பின்னர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, தனது மகளிடம் இருந்து தான் விலகி இருப்பதாக கூறியுள்ள கர்நாடக டிஜிபி ராமச்சந்திர ராவ், அவர் என்ன செய்கிறார் என்பது குறித்த எந்த தகவலும் தன்னிடம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

நான்கு மாதங்களுக்கு முன்பு கட்டிட கலைஞரான ஜடின் ஹுக்கேரியை ரன்யா ராவ் திருமணம் செய்து கொண்டதாகவும், அதன் பிறகு தம்மை சந்திக்க வரவில்லை என்றும் ராமச்சந்திர ராவ் கூறியுள்ளார். மேலும், ரன்யா ராவ் மற்றும் அவரது கணவரின் தொழில் பற்றி தனக்கோ அல்லது தன் குடும்பத்தினருக்கோ எதுவும் தெரியாது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

வளர்ப்பு மகள் தன்னை அவமானப்படுத்தி விட்டதாக கூறியுள்ள ராமச்சந்திர ராவ், ரன்யா சட்டத்தை மீறி இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

துபாயில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தும் பெரிய கடத்தல் கும்பலின் ஒரு பகுதியாக ரன்யா ராவ் இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. ரன்யா ராவ் யார் யாருடன் எல்லாம் தொடர்பில் இருந்தார்? என்றும் அவரை தங்கம் கடத்தலில் ஈடுபடுத்தியவர்கள் யார் ? என்பதைக் கண்டறிய விசாரணை தீவிர படுத்தப் பட்டுள்ளது.

இந்த சூழலில், ரன்யா ராவின் தங்கம் கடத்தலுக்கு பின்னணியில் கர்நாடக காவல் துறை உயர் அதிகாரிகளும் அரசியல் பிரபலங்களும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Tags: Actress Ranya Rao arrested on charges of gold smuggling!நடிகை ரன்யா ராவ் கைதுகன்னட நடிகை ரன்யா ராவ்பெங்களூர்
ShareTweetSendShare
Previous Post

மும்மொழி கொள்கைக்கு ஆன்லைன் மூலம் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆதரவு : அண்ணாமலை

Next Post

வனவிலங்கு பாதுகாப்பு : உலகத் தலைவராக திகழும் இந்தியா!

Related News

தமிழைப் போற்றும் பிரதமர் மோடி!

ஆயுத போராட்டத்தை கைவிடும் மாவோயிஸ்டுகள்? : அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு!

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல ஹாலிவுட் நடிகை – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

தேர்தல் வெற்றிக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ராகுல் – அமித்ஷா குற்றச்சாட்டு!

மகாராஷ்டிரா : ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!

கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை – நடிகர் ரஜினிகாந்த்

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தருமபுரம் ஆதின மடாதிபதி!

டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்காத இங்கிலாந்து அரசு!

திருச்சி : உலக ஓசோன் தினம்- விழிப்புணர்வு மனித சங்கிலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies