தங்கம் கடத்திய புகாரில் நடிகை ரன்யா ராவ் கைது!
Mar 15, 2026, 05:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தங்கம் கடத்திய புகாரில் நடிகை ரன்யா ராவ் கைது!

Murugesan M by Murugesan M
Mar 6, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

துபாயில் இருந்து தங்க நகைகளைக் கடத்திய புகாரில் கன்னட நடிகை ரன்யா ராவ் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் பிடிக்கப்பட்டார். சுமார் 12 கோடி ரூபாய்க்கு மதிப்புள்ள 14.8 கிலோ தங்க நகைகள் ரன்யா ராவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதன் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

கர்நாடகாவின் சிக்மக்ளூரை சேர்ந்த 32வயதான ரன்யா ராவ், பிரபல கன்னட திரைப்பட நடிகையாவார். கன்னட நடிகர் கிச்சா சுதீப் இயக்கி நடித்த “மாணிக்யா” என்ற படத்தில் சுதீப்புக்குச் ஜோடியாக அறிமுகம் ஆனார். தமிழில், நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக, வாகா திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை ரன்யா ராவ், நடித்திருந்தார்.

நடிகை ரன்யா ராவ், கர்நாடகவில் டிஜிபி அந்தஸ்து உள்ள ஐபிஎஸ் அதிகாரியான ராமசந்திரன் ராவின் வளர்ப்பு மகளாவார். ஐபிஎஸ் அதிகாரியான ராமசந்திரன் ராவ் கர்நாடக காவல் துறையில் Housing Corporation ஹவுசிங் கார்பரேஷனில் பணியாற்றி வருகிறார்.

அடிக்கடி சர்வதேச பயணங்களை மேற்கொள்ளும் நடிகை ரன்யா ராவ், (Directorate of Revenue Intelligence)வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தின் ரகசிய கண்காணிப்பில் இருந்து வந்துள்ளார். கடந்த 15 நாட்களில் மட்டும் நான்கு முறை ரன்யா ராவ் துபாய்க்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நான்காவது முறையாக துபாய்க்குச் சென்று விட்டு, கடந்த திங்கட்கிழமை இரவு, துபாயில் இருந்து, எமிரேட்ஸ் விமானத்தில் பெங்களூரு வந்திறங்கினார் நடிகை ரன்யா ராவ்.

அனுமதிக்கப் பட்டிருந்த அளவைக் காட்டிலும் அதிகமாக நகை அணிந்திருந்த ரன்யா ராவை, வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். ஏராளமான தங்க நகைகளை அணிந்திருந்ததையும், அவரது உடைகளில் தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்ததையும், புலனாய்வு அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்.

ஒவ்வொரு முறையும் துபாய் சென்று, தங்கத்தை கடத்தி வந்த ரன்யா ராவை, ​​கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். அவரிடம் இருந்து 14.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பெங்களுருவில் உள்ள DRI தலைமையகத்துக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை செய்யப்பட்டார்.

முதற்கட்ட விசாரணையில், தன்னை டிஎஸ்பி மகள் என்று கூறிய ரன்யாராவ், தன்னை வீட்டுக்கு அழைத்து செல்ல பெங்களூரு மாநகர காவல்துறையினர் வருவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் யாரும் வரவில்லை. அதன் பின்னர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, தனது மகளிடம் இருந்து தான் விலகி இருப்பதாக கூறியுள்ள கர்நாடக டிஜிபி ராமச்சந்திர ராவ், அவர் என்ன செய்கிறார் என்பது குறித்த எந்த தகவலும் தன்னிடம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

நான்கு மாதங்களுக்கு முன்பு கட்டிட கலைஞரான ஜடின் ஹுக்கேரியை ரன்யா ராவ் திருமணம் செய்து கொண்டதாகவும், அதன் பிறகு தம்மை சந்திக்க வரவில்லை என்றும் ராமச்சந்திர ராவ் கூறியுள்ளார். மேலும், ரன்யா ராவ் மற்றும் அவரது கணவரின் தொழில் பற்றி தனக்கோ அல்லது தன் குடும்பத்தினருக்கோ எதுவும் தெரியாது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

வளர்ப்பு மகள் தன்னை அவமானப்படுத்தி விட்டதாக கூறியுள்ள ராமச்சந்திர ராவ், ரன்யா சட்டத்தை மீறி இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

துபாயில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தும் பெரிய கடத்தல் கும்பலின் ஒரு பகுதியாக ரன்யா ராவ் இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. ரன்யா ராவ் யார் யாருடன் எல்லாம் தொடர்பில் இருந்தார்? என்றும் அவரை தங்கம் கடத்தலில் ஈடுபடுத்தியவர்கள் யார் ? என்பதைக் கண்டறிய விசாரணை தீவிர படுத்தப் பட்டுள்ளது.

இந்த சூழலில், ரன்யா ராவின் தங்கம் கடத்தலுக்கு பின்னணியில் கர்நாடக காவல் துறை உயர் அதிகாரிகளும் அரசியல் பிரபலங்களும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Tags: Actress Ranya Rao arrested on charges of gold smuggling!நடிகை ரன்யா ராவ் கைதுகன்னட நடிகை ரன்யா ராவ்பெங்களூர்
ShareTweetSendShare
Previous Post

மும்மொழி கொள்கைக்கு ஆன்லைன் மூலம் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆதரவு : அண்ணாமலை

Next Post

வனவிலங்கு பாதுகாப்பு : உலகத் தலைவராக திகழும் இந்தியா!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

Load More

அண்மைச் செய்திகள்

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies