தமிழகம் முழுவதும் மும்மொழி கல்விக் கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம்!
Mar 15, 2026, 08:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகம் முழுவதும் மும்மொழி கல்விக் கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம்!

Murugesan M by Murugesan M
Mar 6, 2025, 07:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக ஈரோடு மாவட்டத்தில் சூரம்பட்டி, ஜெகநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி.கே.சரஸ்வதி தொடங்கி வைத்த கையெழுத்து வாங்கும் நிகழ்வில் பொதுமக்கள் ஆர்வத்துடன் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்டனர்.

இதே போல வேலூர் மாவட்டத்திலும் மும்மொழி கல்விக் கொள்கையை ஆதரித்து பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பாஜக மாநில பொதுச்செயலாளர் காத்தியாயினி தொடங்கி வைத்த கையெழுத்து இயக்கத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று மும்மொழி கல்விக் கொள்கையை ஆதரித்து அதற்கான படிவத்தில் பதிவு செய்தனர்.

இதையடுத்து ராணிப்பேட்டை மாவட்டம், முத்துக்கடை பேருந்து நிலையத்தில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. பாஜக மாநில செயலாளர் வெங்கடேசன் கையெழுத்து இட்டு மும்மொழிக் கொள்கைக்கான கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்தார்.

மும்மொழி கல்வியை அமல்படுத்த வலியுறுத்தி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர் கலந்து கொண்டு கையெழுத்து இட்டு தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் தனியார் பள்ளிகளுக்கு வருமானம் கிடைக்க வேண்டும் என்பதால் தமிழக அரசு மும்மொழி கல்விக்கு தடை விதிப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. வைகை அணை சாலைப்பிரிவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை பாஜக மாநில நெசவாளர் அணி தலைவர் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.

நாகப்பட்டினத்தில் பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில் பாஜக மாவட்ட தலைவர் விஜேந்திரன் பங்கேற்று மும்மொழிக் கல்விக்கு ஆதரவு தெரிவிக்கும் பொதுமக்களிடம் கையெழுத்தை பெற்றார். அப்போது செய்தியாளகளிடம் பேசிய அவர் தரமான கல்வியை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்பதே பிரதமரின் நோக்கம் என தெரிவித்தார்.

திருவண்ணாமலையில் பாஜக சார்பில் தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து பெறப்பட்டது. மும்மொழிக்கொள்கையின் அவசியம் குறித்து எடுத்துரைத்த பாஜக நிர்வாகிகளுக்கு ஆதரவு தெரிவித்த பொதுமக்கள் கையெழுத்து இயக்கத்தின் படிவத்தில் கையொப்பம் இட்டனர்.

மதுரை பாஜக கிழக்கு மாவட்டம் சார்பில் மும்மொழி கல்விக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் மும்மொழியின் தேவை குறித்து மக்களிடம் வீடு வீடாக சென்று எடுத்துரைத்தனர்.

Tags: tn bjpnew education policySignature movement in support of trilingual education policy across Tamil Nadu!
ShareTweetSendShare
Previous Post

பாடகி கல்பனா தற்கொலை முயற்சி? : மறுக்கும் பாடகியின் மகள்!

Next Post

மும்மொழி கொள்கைக்கு ஆன்லைன் மூலம் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆதரவு : அண்ணாமலை

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies