தமிழகம் முழுவதும் மும்மொழி கல்விக் கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம்!
Jan 14, 2026, 06:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகம் முழுவதும் மும்மொழி கல்விக் கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம்!

Murugesan M by Murugesan M
Mar 6, 2025, 07:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக ஈரோடு மாவட்டத்தில் சூரம்பட்டி, ஜெகநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி.கே.சரஸ்வதி தொடங்கி வைத்த கையெழுத்து வாங்கும் நிகழ்வில் பொதுமக்கள் ஆர்வத்துடன் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்டனர்.

இதே போல வேலூர் மாவட்டத்திலும் மும்மொழி கல்விக் கொள்கையை ஆதரித்து பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பாஜக மாநில பொதுச்செயலாளர் காத்தியாயினி தொடங்கி வைத்த கையெழுத்து இயக்கத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று மும்மொழி கல்விக் கொள்கையை ஆதரித்து அதற்கான படிவத்தில் பதிவு செய்தனர்.

இதையடுத்து ராணிப்பேட்டை மாவட்டம், முத்துக்கடை பேருந்து நிலையத்தில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. பாஜக மாநில செயலாளர் வெங்கடேசன் கையெழுத்து இட்டு மும்மொழிக் கொள்கைக்கான கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்தார்.

மும்மொழி கல்வியை அமல்படுத்த வலியுறுத்தி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர் கலந்து கொண்டு கையெழுத்து இட்டு தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் தனியார் பள்ளிகளுக்கு வருமானம் கிடைக்க வேண்டும் என்பதால் தமிழக அரசு மும்மொழி கல்விக்கு தடை விதிப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. வைகை அணை சாலைப்பிரிவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை பாஜக மாநில நெசவாளர் அணி தலைவர் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.

நாகப்பட்டினத்தில் பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில் பாஜக மாவட்ட தலைவர் விஜேந்திரன் பங்கேற்று மும்மொழிக் கல்விக்கு ஆதரவு தெரிவிக்கும் பொதுமக்களிடம் கையெழுத்தை பெற்றார். அப்போது செய்தியாளகளிடம் பேசிய அவர் தரமான கல்வியை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்பதே பிரதமரின் நோக்கம் என தெரிவித்தார்.

திருவண்ணாமலையில் பாஜக சார்பில் தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து பெறப்பட்டது. மும்மொழிக்கொள்கையின் அவசியம் குறித்து எடுத்துரைத்த பாஜக நிர்வாகிகளுக்கு ஆதரவு தெரிவித்த பொதுமக்கள் கையெழுத்து இயக்கத்தின் படிவத்தில் கையொப்பம் இட்டனர்.

மதுரை பாஜக கிழக்கு மாவட்டம் சார்பில் மும்மொழி கல்விக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் மும்மொழியின் தேவை குறித்து மக்களிடம் வீடு வீடாக சென்று எடுத்துரைத்தனர்.

Tags: tn bjpnew education policySignature movement in support of trilingual education policy across Tamil Nadu!
ShareTweetSendShare
Previous Post

பாடகி கல்பனா தற்கொலை முயற்சி? : மறுக்கும் பாடகியின் மகள்!

Next Post

மும்மொழி கொள்கைக்கு ஆன்லைன் மூலம் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆதரவு : அண்ணாமலை

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies