மும்மொழி கொள்கைக்கு பெருகும் ஆதரவு - ஆர்வமாக கையெழுத்திடும் பொதுமக்கள்!
Oct 3, 2025, 06:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்மொழி கொள்கைக்கு பெருகும் ஆதரவு – ஆர்வமாக கையெழுத்திடும் பொதுமக்கள்!

Web Desk by Web Desk
Mar 7, 2025, 06:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக பாஜக சார்பில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக நடத்தப்படும் கையெழுத்து இயக்கத்திற்கு பொதுமக்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக நாமக்கல்லில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில், ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வி.பி.துரைசாமி, மும்மொழிக் கொள்கையை பெற்றோர்கள் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ச்சியாக உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

இதேபோன்று கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் மும்மொழி கொள்கையை ஆதரித்து பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி முருகானந்தம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று மும்மொழி கல்விக் கொள்கையை ஆதரித்து அதற்கான படிவத்தில் பதிவு செய்தனர்.

இந்நிகழ்வில் பங்கேற்று பேசிய தமிழக பாஜகவின் பொதுச்செயலாளர் ஏ.பி முருகானந்தம், தமிழகத்தில் மும்மொழி கொள்கை நடைமுறைப்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றும், அதனை தடுக்க ஆளும் திமுக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். பொதுமக்களிடம் ஒரு கோடி கையெழுத்து பெற்று மாபெரும் இயக்கமாக மாற்றுவோம் என்றார்.

கோவையில் பாஜக சார்பில் நடைபெற்ற மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்ற பொதுமக்கள், கூடுதலாக ஒரு மொழி கற்பதில் தவறில்லை என்றும், மூன்றாவதாக ஒரு மொழி கற்காதவர்களுக்கு தான் அதனுடைய வலி தெரியும் என்றனர்.

சென்னை சூளைமேட்டில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கத்தை பாஜக மாநில துணைத் தலைவர் டால்ஃபின் ஸ்ரீதர், மாநிலச் செயலாளர் வினோத் பி செல்வம் மற்றும் மாநிலச் செயலாளர் சுமதி வெங்கடேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு, மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்வின்போது செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் டால்ஃபின், மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். மேலும், பொதுமக்களிடம் தவறான கருத்துக்களை திணிக்க திமுக அரசு முயற்சித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

Tags: three-language policybjps signature driveV.P. DuraisamyA.P. Muruganantham launched signature drive
ShareTweetSendShare
Previous Post

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 14 பேர் கைது!

Next Post

மும்மொழி கொள்கை கையெழுத்து இயக்கம் : ஆன் – லைனில் ஒன்றரை லட்சம் பேர் ஆதரவு!

Related News

இந்தியா – சீனா இடையே வரும் 26ம் தேதி முதல் நேரடி விமான சேவை!

கொலம்பியாவில் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு – மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

உலகத் தலைமையை ஏற்கும் நிலையை இந்தியா இன்னும் அடையவில்லை – கொலம்பியாவில் ராகுல்காந்தி சர்ச்சை பேச்சு!

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

ஆயுத பூஜை விடுமுறை – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

பொதுமக்களின் 70 % செலவு குறைப்பு ; மருத்துவத்துறையில் கலக்கும் மகாராஷ்ட்ரா – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளம் – 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

சென்னை மதுரவாயல் நெடுஞ்சாலையில் தடுப்புகள் மீது கார் மோதி விபத்து – இருவர் பலி!

பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.எம்.தமிழ்குமரன் நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

தேசியவாதிகளை வழக்குகளாலும் கைதுகளாலும் முடக்கிவிட முடியாது – நயினார் நாகேந்திரன்

சென்னையில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது – அண்ணாமலை கண்டனம்!

மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் ஆர்எஸ்எஸ் பணிகளால் ஈர்க்கப்பட்டனர் – ராம்நாத் கோவிந்த்

ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞர் – தர்ம அடி கொடுத்து போலீசிலில் ஒப்படைத்த பொதுமக்கள்!

தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு – கொடைக்கானல் மக்கள் கவலை!

பட்டாசு விற்பனை மந்தம் – சிவகாசி வியாபாரிகள் கவலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies