மும்மொழி கொள்கைக்கு பெருகும் ஆதரவு - ஆர்வமாக கையெழுத்திடும் பொதுமக்கள்!
May 2, 2026, 10:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மும்மொழி கொள்கைக்கு பெருகும் ஆதரவு – ஆர்வமாக கையெழுத்திடும் பொதுமக்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 7, 2025, 06:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக பாஜக சார்பில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக நடத்தப்படும் கையெழுத்து இயக்கத்திற்கு பொதுமக்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக நாமக்கல்லில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில், ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வி.பி.துரைசாமி, மும்மொழிக் கொள்கையை பெற்றோர்கள் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ச்சியாக உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

இதேபோன்று கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் மும்மொழி கொள்கையை ஆதரித்து பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி முருகானந்தம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று மும்மொழி கல்விக் கொள்கையை ஆதரித்து அதற்கான படிவத்தில் பதிவு செய்தனர்.

இந்நிகழ்வில் பங்கேற்று பேசிய தமிழக பாஜகவின் பொதுச்செயலாளர் ஏ.பி முருகானந்தம், தமிழகத்தில் மும்மொழி கொள்கை நடைமுறைப்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றும், அதனை தடுக்க ஆளும் திமுக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். பொதுமக்களிடம் ஒரு கோடி கையெழுத்து பெற்று மாபெரும் இயக்கமாக மாற்றுவோம் என்றார்.

கோவையில் பாஜக சார்பில் நடைபெற்ற மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்ற பொதுமக்கள், கூடுதலாக ஒரு மொழி கற்பதில் தவறில்லை என்றும், மூன்றாவதாக ஒரு மொழி கற்காதவர்களுக்கு தான் அதனுடைய வலி தெரியும் என்றனர்.

சென்னை சூளைமேட்டில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கத்தை பாஜக மாநில துணைத் தலைவர் டால்ஃபின் ஸ்ரீதர், மாநிலச் செயலாளர் வினோத் பி செல்வம் மற்றும் மாநிலச் செயலாளர் சுமதி வெங்கடேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு, மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்வின்போது செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் டால்ஃபின், மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். மேலும், பொதுமக்களிடம் தவறான கருத்துக்களை திணிக்க திமுக அரசு முயற்சித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

Tags: three-language policybjps signature driveV.P. DuraisamyA.P. Muruganantham launched signature drive
ShareTweetSendShare
Previous Post

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 14 பேர் கைது!

Next Post

மும்மொழி கொள்கை கையெழுத்து இயக்கம் : ஆன் – லைனில் ஒன்றரை லட்சம் பேர் ஆதரவு!

Related News

இன்றைய தங்கம் விலை!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்தியர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் – சீனா

மேலூர் பகுதியில் ஆலங்கட்டி மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மேற்கு வங்க மாநில 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு!

எல்லைப் பகுதிகள் தன்னிறைவு அடைய வேண்டும் – மத்திய அமைச்சர் அமித் ஷா விருப்பம்!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் தங்கத் தேர் உலா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரிய வழக்கு – தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

PF குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7, 500 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டம்!

விரைவில் தோனி களமிறங்குவார் – மைக் ஹசி தகவல்!

மே 4 -ம் தேதி மக்கனின் உண்மையான கணிப்பு தெரியும் – நயினார் நாகேந்திரன்

ஏப்ரல் மாதத்தில் நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.2,43,000 கோடியாக உயர்வு!

அனைவரும் ஒன்று என்ற உணர்வுடன் வளர வேண்டும்; ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பேச்சு

PF பென்ஷன் ரூ. 7,500 ஆக உயருகிறதா ? விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

10 ஆண்டுகள் நிறைவு செய்த யுபிஐ – நடப்பு நிதியாண்டில் 314 லட்சம் கோடி பணப்பரிவர்த்தனை!

தேனி, பழனி, ஆண்டிப்பட்டியில் வெளுத்து வாங்கிய மழை – பழனி கோவில் படிக்கட்டுகளில் அருவி போல் ஓடிய வெள்ளம்!

பணப்பட்டுவாடாவில் முறைகேடு – கரூர் டீமை களமிறக்கிய செந்தில் பாலாஜி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies