மும்மொழி கொள்கைக்கு பெருகும் ஆதரவு - ஆர்வமாக கையெழுத்திடும் பொதுமக்கள்!
Sep 13, 2026, 01:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்மொழி கொள்கைக்கு பெருகும் ஆதரவு – ஆர்வமாக கையெழுத்திடும் பொதுமக்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 7, 2025, 06:45 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக பாஜக சார்பில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக நடத்தப்படும் கையெழுத்து இயக்கத்திற்கு பொதுமக்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக நாமக்கல்லில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில், ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வி.பி.துரைசாமி, மும்மொழிக் கொள்கையை பெற்றோர்கள் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ச்சியாக உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

இதேபோன்று கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் மும்மொழி கொள்கையை ஆதரித்து பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி முருகானந்தம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று மும்மொழி கல்விக் கொள்கையை ஆதரித்து அதற்கான படிவத்தில் பதிவு செய்தனர்.

இந்நிகழ்வில் பங்கேற்று பேசிய தமிழக பாஜகவின் பொதுச்செயலாளர் ஏ.பி முருகானந்தம், தமிழகத்தில் மும்மொழி கொள்கை நடைமுறைப்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றும், அதனை தடுக்க ஆளும் திமுக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். பொதுமக்களிடம் ஒரு கோடி கையெழுத்து பெற்று மாபெரும் இயக்கமாக மாற்றுவோம் என்றார்.

கோவையில் பாஜக சார்பில் நடைபெற்ற மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்ற பொதுமக்கள், கூடுதலாக ஒரு மொழி கற்பதில் தவறில்லை என்றும், மூன்றாவதாக ஒரு மொழி கற்காதவர்களுக்கு தான் அதனுடைய வலி தெரியும் என்றனர்.

சென்னை சூளைமேட்டில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கத்தை பாஜக மாநில துணைத் தலைவர் டால்ஃபின் ஸ்ரீதர், மாநிலச் செயலாளர் வினோத் பி செல்வம் மற்றும் மாநிலச் செயலாளர் சுமதி வெங்கடேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு, மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்வின்போது செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் டால்ஃபின், மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். மேலும், பொதுமக்களிடம் தவறான கருத்துக்களை திணிக்க திமுக அரசு முயற்சித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

Tags: three-language policybjps signature driveV.P. DuraisamyA.P. Muruganantham launched signature drive
Share
Tweet
SendShare
Previous Post

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 14 பேர் கைது!

Next Post

மும்மொழி கொள்கை கையெழுத்து இயக்கம் : ஆன் – லைனில் ஒன்றரை லட்சம் பேர் ஆதரவு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies