அரசுப்பள்ளி மாணவர்களை முதல்வரின் பிறந்தநாள் விழாவிற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றவர்கள் மீது நீங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
காஞ்சிபுரம் அருகே ஜேஜே நகர் பகுதியில் உள்ள அரசு ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு, மாணவர்களை பள்ளி சீருடையிலேயே முதல்வரின் பிறந்தநாள் விழாவிற்கு அழைத்துச் செல்லும் தைரியமும் துணிச்சலும் தவெக நிர்வாகிகளுக்கு எப்படி வந்தது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வர் பிறந்தநாள் என்று கூறிக் கொண்டு அரசுப்பள்ளி மாணவர்களை தவெக கட்சிக் கொடிகள் கட்ட வைப்பது, அரசுப் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்களை உங்களுக்கு “ஹாப்பி பார்த்டே” பாட வைப்பது, அரசு துவக்கப்பள்ளி மாணவர்களை “விஜய் வாழ்க” என கோஷமிட வைப்பது என படிக்கும் பிள்ளைகளை பணியாட்கள் போல நடத்துவதற்கு உங்கள் கட்சியினருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? என்றும் அவர் வினவியுள்ளார்.
எங்கள் வீட்டுப் பிள்ளைகளை வலுக்கட்டாயமாக உங்கள் பிறந்தநாளைக் கொண்டாட வைக்குமளவிற்கு நீங்கள் என்ன சுதந்திரப் போராட்டத் தியாகியா? என்றும், கடந்த தேர்தலின் போது சட்டத்திற்கு புறம்பாக சிறுவயது குழந்தைகளை பகடைக்காய்களாகப் பயன்படுத்தி அரியணையில் அமர்ந்த நீங்கள், தற்போது அதே குழந்தைகளை பணியாட்கள் போல பயன்படுத்துவதை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அரசுப்பள்ளி மாணவர்களை முதல்வரின் பிறந்தநாள் விழாவிற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றவர்கள் மீது நீங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
















