அசாம் மாநிலத்தில் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பலியானோர் எண்ணிக்கை 98ஆக உயர்ந்துள்ளது.
மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்து 55 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அசாம் வெள்ளப் பாதிப்பைத் தேசியப் பேரிடராக அறிவிப்பதற்குப் பதிலாக, வெள்ளத்தடுப்பிற்கு தேசிய அளவிலான தீர்வையே தாங்கள் விரும்பவதாக, மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
மொத்தம் 13 மாவட்டங்களில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.,
















