ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கடுமையாக சரிந்துள்ளதால், குளிக்கவும், பரிசல் இயக்கவும், அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் அணைகளில் இருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டு, காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல்லில் கடந்த நான்கு நாட்களாக பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று 18 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று ஆறாயிரம் கனஅடியாக சரிந்துள்ளது. இதனால் பரிசல் இயக்கவும், நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. .
















