சென்னை ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட கொடூரமான குண்டுவெடிப்பில் உயிரிழந்த தேச பக்தர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவோம் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், ஆகஸ்ட் 8, மறக்க முடியாத கருப்பு நாள். 1993-ல் சென்னை ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட கொடூரமான குண்டுவெடிப்பில் 11 ஆர்.எஸ்.எஸ். சகோதரர்கள் உயிரிழந்ததை குறிப்பிட்டுள்ளார்.
அது வெறும் ஒரு கட்டிடத்தின் மீதான தாக்குதல் அல்ல; தேசத்திற்கும் சமூகத்திற்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய தேசபக்தர்களின் உயிர்களைப் பறித்த கொடூரச் செயல் என்றும் கூறியுள்ளார்.
ஆண்டுகள் கடந்துவிட்டதால் அந்தக் குற்றத்தின் கொடுமை மறைந்துவிடாது. காலம் கடந்துவிட்டதால் அந்த 11 உயிர்களின் நினைவும் அழிந்துவிடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களின் தியாகத்தை அரசியல் வசதிக்காக மறைக்கவோ, வரலாற்றை மௌனத்தில் புதைக்கவோ முடியாது. அவர்களின் தியாகம் எங்கள் உறுதியை மேலும் வலுப்படுத்துகிறது. அமரத் தியாகிகளுக்கு வீர வணக்கம் எனநயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
















