பயனாளர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு UPI பண பரிவர்த்தனை சேவை தொடர்ந்து இலவசம் என பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
வரி மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில் மின்னணு பரிவர்த்தனை முறைகளுக்கு வணிகர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டண முறைகளில் விலக்கு அளிப்பதை மத்திய அரசு தீர்மானிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பல்வேறு யூகங்கள் கிளம்பின. யுபிஐ பரிமாற்றத்திற்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக கூறப்பட்ட நிலையில் மக்களின் சந்தேகங்களுக்கு பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
யுபிஐ பயனர்களுக்கு எப்போதும் இலவசமாகவே இருக்கும் எனவும் டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றங்களுக்கு சிறிய வர்த்தகர்களுக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளது…
















