ஜந்தர்- மந்தர் போராட்ட களத்தை ஏன் முழுமையாக மூடக்கூடாது என மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்திய தலித் கிறிஸ்துவர் உரிமைகள் பாதுகாப்பு குழு சார்பில் டெல்லியின் ஜந்தர் – மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் அதிகாரிகள் பதிலளிக்காமல் அலட்சியம் காட்டுவதாக குற்றஞ்சாட்டிய பாதுகாப்பு குழு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதனை விசாரித்த நீதிபதி அமித் மகாஜன் நகரின் மையப்பகுதியில் போராட்டம் நடத்துவதால் பொதுமக்கள் சிரமம் அடைவதாக தெரிவித்தார். ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதிப்பது அவசியம் தானா? என கேள்வி எழுப்பிய நீதிபதி, ஜந்தர் – மந்தர் போராட்ட களத்தை முழுமையாக மூடுவது குறித்து ஏன் பரிசீலிக்கக் கூடாது என்றும் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினார்.
















