மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ள தமிழக அரசு அதுதொடர்பான மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் வாயிலாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் காலி பாட்டில்களை மறுசுழற்சி செய்வதில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளை சரிசெய்யும் வகையில் புதிதாக வரி விதிக்கும் முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது.
இது தொடர்பான சட்டமுன்வடிவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்த வணிகவரித்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன், மதுபான விற்பனையில் சுற்றுச்சூழல் மற்றும் சமூகநலத் தீர்வை என்ற புதிய வரியை விதிக்க உள்ளதாகவும், இதன் மூலம் கிடைக்கும் வருவாய் கண்ணாடி பாட்டில்கள் மறுசுழற்றி, போதை மறுவாழ்வு மையம் உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்வைவரி மூலம் மதுபானம் பாட்டில் ஒன்றுக்கு 20 ரூபாய் வரை விலையை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
















