மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் திருவண்ணாமலை வருகையையொட்டி, ஹெலிகாப்டர் தரையிறங்கும் இடத்தில் பாதுகாப்பு ஒத்திகை மற்றும் ஆய்வுப் பணிகள் நடைபெற்றன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை திருவண்ணாமலை வருகை தரவுள்ளார். இதையொட்டி கிரிவலப் பாதையில் உள்ள அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்தில், அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, ஹெலிகாப்டர் தரையிறங்கும் ஒத்திகையும் நடத்தப்பட்டது. ஹெலிகாப்டர் தளம் அருகே தீயணைப்புத் துறை, 108 ஆம்புலன்ஸ், நடமாடும் மருத்துவமனை உள்ளிட்ட அவசரகால சேவைகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. அமித்ஷா வருகையையொட்டி திருவண்ணாமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
















