ஆடி வெள்ளிக்கிழமையை ஒட்டி காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் முப்பெரும் தேவியர் தங்கத் தேரில் பக்தர்கள் அருள்பாலித்தனர்.
உலகப் புகழ்பெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மாத வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி லட்சுமி, சரஸ்வதி மற்றும் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
இதையடுத்து தங்கத்தேரில் முப்பெரும் தேவியரும் எழுந்தருளி கோயில் வெளி பிரகாரத்தில் வலம் வந்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கத்தேரை வடம்பிடித்து இழுத்து மனமுருகி சாமி தரிசனம் செய்தனர்.
















