மின்சாரத்துறையில் தேர்வான பணியாளர்ளுக்கு நியமன ஆணை வழங்கும் விழாவில், நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையில் இருந்து கீழே இறங்கி சென்று முதலமைச்சர் விஜய் ஆணையை வழங்கினார்.
சென்னை கலைவாணர் அரங்கில் மின்சாரத்துறையில் தேர்வான 401 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 383 உதவிப் பொறியாளர்கள், 18 உதவி கணக்கு அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு பணி ஆணைகளை வழங்கினார்.
இந்த விழாவில் நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையில் இருந்து கீழே இறங்கி சென்று முதலமைச்சர் விஜய் பணி நியமன ஆணையை வழங்கினார்.
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார், கடந்த 25 வருடமாக சீரழிந்து கிடக்கும் துறையை சீரமைக்கும் நேரம் வந்துவிட்டது என்றும், ஒரே வருடத்தில் 15 ஆயிரம் பேரை பணியமர்த்த உள்ளதாகவும் கூறினார்.
மக்களுக்கு பயந்து மட்டுமே அரசு செயல்படும் என்றும், வேறு யாருக்கும் பயப்படாது எனவும் குறிப்பிட்டார். மின்துறை தொடர்பான வெள்ளை அறிக்கை நாளை வெளியிடப்படும் எனக்குறிப்பிட்ட அவர், மின்வாரியத்தை இப்போது சீரமைக்காவிட்டால், இனி எப்போதும் சீரமைக்க முடியாது என தெரிவித்தார்.
















