திமுக எதிர்ப்பை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறைத்துள்ளது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டம் – ஒழுங்கு, பாலியல் குற்றங்கள், மின்வெட்டு பிரச்னை குறித்து ஆளுங்கட்சியான தவெகவுக்கு எதிராக அறிக்கை விடும் இபிஎஸ், முந்தைய ஆட்சியாளரான திமுக குறித்து எதுவும் சுட்டிக்காட்டவில்லை என அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்னர். தவெக அரசு இன்று சந்திக்கும் சட்டம் – ஒழுங்கு பிரச்னை, மின்வெட்டுக்கு, முந்தைய திமுக அரசும் ஒரு வகையில் காரணம் என்பதை மறந்து திமுகவை விமர்சிப்பதை இபிஎஸ் தவிர்த்து வருவதாகவும் கூறியுள்ளனர்.
இபிஎஸ் இதுவரை வெளியிட்ட 99 சதவித அறிக்கையில் திமுகவின் பெயர் கூட இடம்பெறவில்லை என்றும், அறிக்கை தயார் செய்வோருக்கும் தவெகவை மட்டும் விமர்சித்தால் போதும் என இபிஎஸ் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
திமுகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க இபிஎஸ் முயன்றதாக கூறப்படும் நிலையில், இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், திமுக எதிர்ப்பினால்தான் அதிமுக வளர்ந்து பலமுறை ஆட்சி அமைத்தது என்றும், திமுக எதிர்ப்பை கைவிடுவது அதிமுகவுக்கு நல்லதல்ல எனவும் அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
















