ஐஐடி இயக்குநர் காமகோடி, நடிகர் மம்முட்டி, மாதவன் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் குடியரசு தலைவர் வழங்கினார்!
Jun 24, 2026, 10:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐஐடி இயக்குநர் காமகோடி, நடிகர் மம்முட்டி, மாதவன் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் குடியரசு தலைவர் வழங்கினார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 24, 2026, 09:10 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பல்வேறு துறைகளில் சாதித்த 65 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கெளரவித்தார்.

கலை, இலக்கியம், சமூக சேவை, மருத்துவம், அறிவியல் உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தியவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்தாண்டு 131 பேருக்கு விருதுகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதில் முதற்கட்டமாக கடந்த மாதம் 25-ம் தேதி 66 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து 2ஆம் கட்டமாக 65 பேருக்கு விருது வழங்கும் விழா, டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில், சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதை வழங்கி குடியரசுத் தலைவர் கெளரவித்தார்.

திரைத்திரையில் சாதித்த மலையாள நடிகர் மம்முட்டிக்கு பத்ம பூஷண் விருதும் நடிகர் மாதவனுக்கு பத்ம ஸ்ரீ விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

விளையாட்டுத் துறையில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவுக்கு பத்ம ஸ்ரீ விருதையும், டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜுக்கு பத்ம பூஷண் விருதையும் வழங்கி குடியரசுத் தலைவர் கெளரவித்தார்.

இதேபோல் புகழ்பெற்ற மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவத்சலம், சிற்பக் கலைஞர் ராஜஸ்தபதி கலியப்ப கவுண்டர், கர்நாடக இசைப் பாடகிகள் ரஞ்சனி – காயத்ரி சகோதரிகள் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும், தொழிலதிபர் எஸ்.கே.எம். மயிலானந்தன், மருத்துவர் புண்ணியமூர்த்தி நடேசன், பேராசிரியர் கே.ராமசாமி ஆகியோரும் குடியரசுத் தலைவர் கரங்களால் விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.. இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags: IIT Madras Director KamakotiActor MadhavanPresident Droupadi MurmuPadma Awardsactor Mammootty
ShareTweetSendShare
Previous Post

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

Related News

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஐஐடி இயக்குநர் காமகோடி, நடிகர் மம்முட்டி, மாதவன் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் குடியரசு தலைவர் வழங்கினார்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies