இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி சர்வதேச கால்பந்து போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், தனது முடிவைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சுனில் சேத்ரி,கடந்தாண்டு ஜூன் மாதம் தேசிய அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த மாதம் நடைபெறவுள்ள ஃபிபா நட்புறவு போட்டிக்கான இந்திய அணியில் கலந்துகொண்டு விளையாடுவதற்காக சுனில் சேத்ரி தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றுவிட்டதாக இந்திய கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.