எதிரிகளின் சிம்ம சொப்பனம் ராஜ ஆதித்ய சோழன்!
Jan 14, 2026, 02:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ராஜ ஆதித்ய சோழன்!

Murugesan M by Murugesan M
Mar 7, 2025, 09:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையின் ஆள் சேர்ப்பு மற்றும் பயிற்சி மையத்திற்கு சோழ இளவரசர் ராஜாதித்யன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. யார் இந்த ராஜாதித்ய சோழன், அவரின் சிறப்புகள் என்ன? என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் 56வது ஆண்டு விழாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சோழ இளவரசர் ராஜாதித்யன் பெருமைகளை சுட்டிக் காட்டிப் பேசினார்.

யார் இந்த சோழ இளவரசன் என்கிற கேள்வி உங்களுக்கு எழும்.அதற்கு சோழர்களின் வரலாற்றை அறிய கொஞ்சம் பின்னோக்கி செல்வோம். சோழப் பேரரசு பரந்து விரிந்தது பிற்கால சோழர்களின் காலத்தில் தான்.

குறிப்பாக ராஜராஜ சோழன் ஆட்சியில். கி.பி. 880ம் ஆண்டு திருப்புறம்பியம் போரில் வென்று சோழ பேரரசுக்கு அடித்தளம் அமைத்தார் விஜயால சோழன். அவரது மகன் ஆதித்ய சோழன் ஆட்சியில் சோழப் பேரரசு விரிவிடைந்தது. அவரது மகன் பராந்தக சோழன் ஆட்சியில், சோழர்களின் ஆட்சி குமரி தொடங்கி, வடக்கே நெல்லூர் வரை நீண்டது. குறிப்பாக ராஷ்ட்ரகூட மன்னர்களை தொடர் தோல்விக்கு உள்ளாக்கி, சோழ ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தியிருந்தார்.

ஆனால், ராஷ்ட்ரகூடர்களின் பகை மட்டும் நீறுபூத்த நெருப்பாகவே இருந்தது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் படையெடுத்து வரலாம் என்கிற நிலையால், இளவரசனாக இருந்த ராஜாதித்ய சோழனை வட எல்லையில் படை அமைத்து நிர்வாகம் செய்ய உத்தரவிட்டிருந்தார் பராந்தக சோழன்.

எதிர்பார்த்தபடியே ராஷ்ட்ரகூட மன்னன் 3ம் கிருஷ்ணன், கங்க மன்னன் பூதுகன் உள்ளிட்டவர்களை ஒருங்கிணைத்து, பெரும்படையுடன் சோழ தேசம் நோக்கி விரைந்தார். கி.பி 949ம் ஆண்டு, இப்போதைய அரக்கோணத்தின் கிழக்கு பகுதியில் உள்ள தக்கோலம் என்கிற இடத்தில் இரு படைகளும் மோதின.

குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் ராஜாதித்ய சோழனின் தலைமையில் மிகவும் தீரத்துடன் போர் புரிந்தனர் சோழப்படையினர். சிறிய படை, பெரும்படையை சிதறடித்துக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட வெற்றி உறுதி என்று சோழர்கள் முன்னேறிக் கொண்டிருந்தனர்.

குறிப்பாக தலைமையின் இலக்கணமாக ராஜாதித்ய சோழன் தனது அனைத்து படைக் கருவிகளையும் உபயோகித்துப் போரிட்டதாகவும், அவனை நெருங்க முடியாமல் எதிரிப் படைகள் திணறியதாகவும் இதுவே சோழப்படைக்கு பெரும் உத்வேகமாக அமைந்தது என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

தீரத்துடன் போரிட்டுக் கொண்டிருந்த ராஜாதித்ய சோழனை வீழ்த்தினால் மட்டுமே போரில் வெல்ல முடியும் என்று முடிவு செய்த கங்க மன்னன் பூதுகன், தனது படைகள் ராஜாதித்தனை மட்டும் குறிவைத்து, தாக்க திட்டமிட்டான். தனது படைத் தலைவர்களில் ஒருவனான மணலேரா என்பவனுடன் சேர்ந்து ராஜாதித்தனையும் சோழப் படையையும் பிரிக்க வியூகம் வகுத்தான். இதன்படி, சோழப் படைகளைத் திசை திருப்பி, ராஜ ஆதித்யனை தனிமைப்படுத்தினார்கள். அப்போது, பூதுகன் ராஜாதித்தனை நோக்கி மெல்ல முன்னேறி, அம்புகளை எய்தான்.

தீடீர் தாக்குதலை எதிர்பாராத ராஜாதித்ய சோழன் தற்காத்துக் கொள்ள முயன்றாலும், பூதுகன் விட்ட அம்புகளில் ஒன்று ராஜாதித்தன் மார்பில் தைத்தது. போர்க்களத்தில் யானையின் மீதமர்ந்த நிலையில், வீர மரணமடைந்தார் ராஜாதித்ய சோழன். தலைவன் இல்லாத படை சிதறியது. ராஷ்ட்ரகூடர் படை வென்றது. இறுதி வரை போரிட்ட ராஜாதித்யனை யானை மேல் துஞ்சிய சோழர் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

போர்க்களத்தில் மட்டுமல்ல மக்கள் நலனிலும் அக்கறை கொண்ட இளவரசனாக இருந்தவர் ராஜாதித்யன் என்கிறார்கள். போர்க்களத்திற்கு சென்ற வீரர்களைக் கொண்டு் ஒரு ஏரியை வெட்டிய ராஜாதித்ய சோழன். அதற்கு தனது தந்தை முதலாம் பராந்தக சோழனின் பெயரையே சூட்டினான். செயற்கையாக வெட்டப்பட்ட பெரிய ஏரியாக இன்றைக்கும் மக்களுக்கு பயனளித்து வருகிறது.

குறிப்பாக சென்னை மக்களின் தாகத்தை தீர்த்து வரும் வீராணம் ஏரி என்கிற வீர நாராயணன் ஏரிதான் அது. கல்கியின் புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் தொடக்கம் இந்த ஏரியில்தான் தொடங்கும்.

இத்தகைய சிறப்பு பெற்ற ராஜாதித்த சோழனின் பெயர்தான் அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையின் ஆள் சேர்ப்பு மற்றும் பயிற்சி மையத்திற்கு அண்மையில் சூட்டப்பட்டது.

மத்திய தொழில் பாதுகாப்பு படை வி்ழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், ராஜாதித்த சோழன், சோழப் பேரரசின் பெருமையை முன்னெடுத்து சென்றார் என்றும், இந்த தக்கோலம் பகுதியில் தான் தனது வலிமையையும், தியாகத்தையும் வெளிப்படுத்தி வீரமரணம் அடைந்ததாக குறிப்பிட்டார். தக்கோலத்தில் அமைந்துள்ள தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையத்திற்கு சோழ வம்சத்தின் மாவீரர், ராஜாதித்த சோழர் பெயர் வைக்கப்பட்டுள்ளதற்காக தாம் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் அமித்ஷா தெரிவித்தார்.

Tags: Raja Aditya Cholathe lion's dream of his enemies!ராஜ ஆதித்ய சோழன்
ShareTweetSendShare
Previous Post

மகா கும்பமேளாவில் ரூ.30 கோடி வருமானம் : படகு ஓட்டுநர் குடும்பத்தின் வெற்றிக் கதை!

Next Post

சர்வதேச மகளிர் தினம் – குடியரசு தலைவர் வாழ்த்து!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

Load More

அண்மைச் செய்திகள்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies