சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, முழுக்க முழுக்க பெண்களால் இயக்கப்படும் ரயிலை மத்திய ரயில்வே இயக்குகிறது.
அதன்படி, மும்பை – ஷீரடி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில், முழுவதும் பெண்களை கொண்ட குழுவால் இயக்கப்படுகிறது. லோகோ பைலட், உதவி லோகோ பைலட், ரயில் மேலாளர், பயணச்சீட்டு பரிசோதகர் என முழுவதும் பெண்களை கொண்டு அந்த ரயில் இயக்கப்படுகிறது.