மாசித் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடைவரைவாயில் தீபாராதனை நடைபெற்றது. அறுபடை
வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில் கடந்த 3-ந் தேதி மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்நிலையில் 5-ம் திருநாளான நேற்று குடைவரைவாயில் தீபாராதனை வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக குமரவிடங்கப் பெருமான் மற்றும் தெய்வானை அம்பாள் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி பவனி வந்தனர். விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று மனமுருகி சாமி தரிசனம் செய்தனர்.