ஒடிசா சட்டசபையில் பாஜக, காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்னை அதிகரித்து விட்டதாக குற்றம் சாட்டிய காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், அதுகுறித்து விவாதிக்கக்கூறி அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது பாஜக மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து பேரவை நடத்தை விதிகளை மீறியதாக காங்கிரஸ் எம்.எல். தாராபிரசாத் பாஹினிபதி, 7 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.