செங்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடிய கனரக வாகனத்தால் 5 வாகனங்கள் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த தண்டம்பட்டு – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ராட்சத குழாய்களை ஏற்றி கொண்டு கனரக வாகனம் சென்று கொண்டிருந்தது. சிங்காரப்பேட்டை அருகே சென்றபோது மதுபோதையில் இருந்த ஓட்டுநர் வாகனத்தை தாறுமாறாக இயக்கியுள்ளார்.
அப்போது, கனரக வாகனம் மீது மோதாமல் இருக்க 5க்கும் மேற்பட்ட வாகனங்கள் இடதுபுறமாக திரும்புபோது எதிர்பாராத விதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனாது.
இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், காயமடைந்த 3 ஓட்டுநர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.