கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் வரும் 16ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் தடைவிதித்துள்ளனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவில் கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் வருடாந்திர திருவிழா மார்ச் 15, 16 ஆகிய தேதிகளில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
இந்த திருவிழாவில், இந்தியாவில் இருந்து சுமார் 2 ஆயிரத்து 500 பக்தர்கள் கலந்துகொள்ள உள்ள நிலையில், சட்டவிரோத ஊடுருவலை தடுக்க இருநாட்டு கடற்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கச்சத்தீவு திருவிழாவிற்கு பக்தர்களை ஏற்றிச் செல்லும் படகுகளின் ஆவணங்கள் சரிபார்ப்பு பணி நடைபெற்று வரும் நிலையில், வரும் 16ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
5 நாட்களுக்கும் மீன்வளத்துறை சார்பில் படகுகளுக்கு அனுமதி டோக்கன் வழங்கப்படமாட்டது என்றும், மீறி கடலுக்கு செல்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.