பூந்தமல்லி – பரந்தூர் மெட்ரோ ரயில் பாதை நீட்டிப்பு தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் மெட்ரோ ரயில் நிர்வாகம் சமர்ப்பித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநரிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், பூந்தமல்லியில் இருந்து செம்பரம்பாக்கம், தண்டலம், இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் வழியாகச் சென்று பரந்தூர் விமான நிலையம் வரையில் வழித்தடம் அமைகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூந்தமல்லி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் இடையேயான 5.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் முன்மொழியப்பட்ட உயர்த்தப்பட்ட வழித்தடத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வழித்தடத்தின் 52.94 கிலோ மீட்டர் தொலைவுடன் 20 உயர்த்தப்பட்ட ரயில் நிலையங்கள் இடம்பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மொத்த செலவு 15 ஆயிரத்து 906 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டு உள்ளது என்றும், பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரையில் 8 ஆயிரத்து 779 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 14 நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை 2028ஆம் ஆண்டுக்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
====