விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அரசு பேருந்தின் பின்பகுதி சேதமடைந்த நிலையில், கயிறு கட்டி இயக்கப்படுவது பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
விளாம்பட்டிக்கு இயக்கப்படும் அரசு பேருந்தில் பின்பகுதி சேதமடைந்துள்ளது. ஆனால் இதை சீரமைக்காமல் கயிறு கட்டி பேருந்தை இயக்கி வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.