தென்காசி மாவட்டம் கடையம் அருகே கிணற்றில் தவறி விழுந்த கடமான் பத்திரமாக மீட்கப்பட்டது.
கடையம் வனச்சரகத்தில் மந்தியூர் பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் கடமான் தவறி விழுந்ததாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர் கடமானை கிணற்றிலிருந்து மீட்டனர். தொடர்ந்து மானை பரிசோதித்த வனத்துறையினர் நலமோடு இருந்ததால் மீண்டும் வனப்பகுதியில் பத்திரமாக விடுவித்தனர்.