சேலம் மாவட்டம் சங்ககிரியில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற கார், எதிர்பாராத விதமாக பேருந்தின் முன்பகுதியில் மோதிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பட்டர்ஃபிளை பாலத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. எனினும், நல்வாய்ப்பாக காரில் பயணித்த 5 பேரும் உயிர் தப்பினர். விபத்து குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.