மதுரை மத்திய சிறையில் 1 கோடியே 63 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக சிறைத்துறை கண்காணிப்பாளர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
சிறையில் இருந்து மாஸ்க், கையுறை போன்ற மருத்துவ பொருட்கள் அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் நிலையில், இந்த விற்பனையில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது சமீபத்தில் தெரியவந்தது.
இதுதொடர்பாக 9 அதிகாரிகள் ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், சிறைத்துறை கண்காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளர் உள்பட 3 அதிகாரிகளை சிறைத்துறை டிஜிபி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.