ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு தாக்குதல்களை நடத்திய லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த முக்கிய நபர் கொல்லப்பட்டுள்ளார்.
ரஜோரி மாவட்டம் தாங்ரி கிராமத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 2 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
அதேபோல், கடந்தாண்டு ஜூன் 9-ம் தேதி ரியாசியில் பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அபு கத்தால் என்பவர் பாகிஸ்தானில் கொல்லப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.