வடமேற்கு ஈக்வடாரில் எண்ணெய் கசிவு காரணமாக ஆறு கருப்பாக காட்சியளிப்பதால் சுற்றுச்சூழல் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு ஈக்வடாரில் நிலச்சரிவால் மிகப்பெரிய எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, எஸ்மரால்டாஸ் ஆற்றின் ஒரு பகுதியில் நீர் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.
மேலும், குடிநீர் மாசடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் அவசரநிலையை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.