இராமேஸ்வரத்தில் கந்துவட்டி கும்பலால் ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டது.
இராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான சேது மாணிக்கத்தைக் கந்துவட்டி கும்பல் தாக்கியுள்ளனர். இதுகுறித்து அவர் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த சத்ரிய நாடார் சங்கத்தினர், கந்துவட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் புகார் மனு அளித்தனர்.