அதிபர் ட்ரம்ப்பிற்கு அதிகரித்த செல்வாக்கு : மக்களின் மார்க் என்ன?
May 12, 2025, 10:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அதிபர் ட்ரம்ப்பிற்கு அதிகரித்த செல்வாக்கு : மக்களின் மார்க் என்ன?

Web Desk by Web Desk
Mar 18, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாடு, சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக அதிகமான அமெரிக்கர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், அதிபர் ட்ரம்பின் செல்வாக்கு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பதவி ஏற்று மூன்று மாதங்கள் முடிந்துள்ள நிலையில், அதிபர் ட்ரம்ப்பின்  நிர்வாகம் குறித்த கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.  (Quinnipiac University )குயின்னிபியாக் பல்கலைக்கழகம், RealClearPolitics, CNN மற்றும் NBC ஆகிய நிறுவனங்கள், ட்ரம்ப் அதிபராக இருப்பதில் அமெரிக்கர்கள் மகிழ்ச்சியடைகிறார்களா ? என்று கருத்துக் கணிப்புகள் நடத்தின.

இதன் அடிப்படையில், ட்ரம்பின் மீது அமெரிக்க மக்களின் ஒப்புதல் மதிப்பீடுகள்  வெளியாகியுள்ளன. கிட்டத்தட்ட எல்லா கருத்துக் கணிப்புகளின் முடிவுகளும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன.  குறிப்பாக, ட்ரம்பின் ஒப்புதல் மதிப்பீடு 47 சதவீதத்தை எட்டியுள்ளது. இது முதல்முறையாக,ட்ரம்ப் பெற்ற மிக உயர்ந்த மதிப்பீடு ஆகும்.

2004 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை இல்லாத வகையில், நாடு சரியான பாதையில்  சென்று கொண்டிருப்பதாக 44 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு நேர்மாறாக, 54 சதவீத அமெரிக்கர்கள் நாடு தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதாகக் கூறியுள்ளனர்.

தனது இரண்டாவது பதவிக்காலத்தில் ட்ரம்ப், அரசின் செயல்திறன் துறையை (DOGE) உருவாக்கினார். இதற்கு எலான் மஸ்க்கை தலைவராக நியமித்தார். ட்ரம்பின் அதிரடியான இந்த நடவடிக்கைக்கு, ஜனநாயகக் கட்சியினரிடமிருந்தும் உட்பட அரசு ஊழியர்களிடமிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், 46 சதவீத மக்கள், அரசு செயல்திறன் துறை ஏற்படுத்தியது  ஒரு நல்ல யோசனை என்று கூறியுள்ளனர்.  குடியரசுக் கட்சியினரிடையே ட்ரம்பின்  ஒப்புதல் மதிப்பீடு  90 சதவீதம் ஆகும். அதே நேரத்தில், 4 சதவீத ஜனநாயகக் கட்சியினர் அவருக்கு ஆதரவாக உள்ளதாகக் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

இது, கடந்த 80 ஆண்டுகளில் ஒரு அதிபரின்  கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான மிகப்பெரிய ஒப்புதல் இடைவெளி ஆகும். உக்ரைன் மற்றும் நேட்டோ தொடர்பான அதிபரின் அணுகுமுறை சரியானது என்று 41 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர்.

எல்லைப்பகுதிகளில் அவசர நிலை அறிவித்தது, சட்ட விரோதமாகக் குடியேறியவர்களைத் திருப்பி அனுப்பியது என ட்ரம்பின் எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகளை 56 சதவீத மக்கள் ஆதரித்துள்ளனர். நாட்டின் பொருளாதாரத்தை ட்ரம்ப் கையாளும் விதத்தை ஏற்கவில்லை என்று  54 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர்.

ட்ரம்பின்  கொள்கைகள் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக 40 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர்.    அதே சமயம், சுமார் 30 சதவீதம் பேர் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துவதாக நம்புகிறார்கள் இதற்கிடையில், அவரது கொள்கைகள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று 28 சதவீத பேர் தெரிவித்துள்ளனர்.

தனது அதிரடி அறிவிப்புக்களாலும், அதிர்ச்சி தரும் உத்தரவுகளாலும் சர்வதேச அரசியலில் புயலை ஏற்படுத்தி வரும் அதிபர் ட்ரம்ப்புக்கு ,உள்நாட்டில் மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது என்பதையே கருத்துக் கணிப்புகள் எடுத்துக்காட்டுகின்றன.

Tags: donald trump 2025President Trump's increased influence: What is the public's opinion?அதிபர் ட்ரம்ப்
ShareTweetSendShare
Previous Post

அவுரங்கசீப்பை புகழ்பவர்கள் துரோகிகள் : ஷிண்டே

Next Post

மதுபான கொள்முதல் ஊழலில் சத்தீஸ்கர், தெலங்கானா, டெல்லி வரிசையில் அடுத்தது தமிழ்நாடு : எச். ராஜா

Related News

உலகின் ஒரே சூப்பர் சோனிக் குரூஸ் : பாகிஸ்தானை கதிகலங்க வைத்த பிரம்மோஸ்!

பொய் சொல்லி சிக்கிய பாகிஸ்தான் : அப்பாவி என கூறப்பட்டவர் தீவிரவாதி என நிரூபணம்!

கிரிக்கெட் உலகின் THE GOAT விராட் கோலி!

இந்தியாவின் எல்லைச்சாமி ஆகாஷ் ஏவுகணை!

உதார் விடும் பாகிஸ்தான் : திவாலாகும் பொருளாதாரம் – சாப்பாட்டுக்கே வழியில்லை!

அமெரிக்கா, சீனா பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்க ஒப்புதல்!

Load More

அண்மைச் செய்திகள்

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 செயற்கைக்கோள்கள் 24 மணிநேரமும் கண்காணிப்பு : இஸ்ரோ தலைவர் நாராயணன்

’ஆப்ரேஷன் சிந்தூர்’ : இந்தியாவை பாராட்டிய பென்டகன் முன்னாள் அதிகாரி!

பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை இந்தியா வெற்றிகரமாக தகர்த்து அழித்தது : ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி

ஒரே மையத்தில் தேர்வு எழுதிய அனைவருமே முழுமதிப்பெண் பெற்றதில் முறைகேடு என குற்றச்சாட்டு!

அரியலூர் : கொள்ளிடம் ஆற்றில் ராணுவ ஹெலிகாப்டர் தரை இறங்கியதால் பரபரப்பு!

பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா வெற்றி பெற வேண்டும் : நயினார் நாகேந்திரன் வேண்டுதல்!

விளாத்திகுளம் அருகே ரவுடி கொலை : 7 ஆண்டுகளுக்கு பின் குற்றவாளிகளை கைது செய்த காவல்துறை!

நாளை தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை!

மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடர் : இந்தியா சாம்பியன்!

பாகிஸ்தானில் நிலநடுக்கம்  – ரிக்டரில் 4.6 ஆக பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies