திராவிட மாடல் அரசு ஆலய வருமானத்தை சுரண்டுவதில் மட்டும் ஆர்வம் காட்டுகிறது : எச். ராஜா குற்றச்சாட்டு!
Jan 14, 2026, 02:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திராவிட மாடல் அரசு ஆலய வருமானத்தை சுரண்டுவதில் மட்டும் ஆர்வம் காட்டுகிறது : எச். ராஜா குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Mar 18, 2025, 07:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திராவிட மாடல் அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் ஆலய வருமானத்தை சுரண்டுவதில் மட்டும் ஆர்வம் காட்டுகிறது என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

ஆலய வருமானத்தை சுரண்டுவதில் மட்டும் ஆர்வம் காட்டும் திராவிட மாடல் அரசும், இந்து சமய அறநிலையத்துறையும், ஆலயங்களுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பையும், தேவையான அடிப்படை வசதிகளையும் உரிய வகையில் செய்து கொடுக்காமல் அலட்சியம் காட்டி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என எச். ராஜா தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தரிசனத்திற்கு வருகை தந்த பக்தர் ஒருவர் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்ததால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்றைய தினம் உயிரிழந்த சோகம் மறைவதற்குள், இராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலுக்கு தரிசனத்திற்கு வருகை தந்த பக்தர் ஒருவர் அதே போல் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்ததால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த சோகம் மீண்டும் நிகழ்ந்துள்ளது என எச். ராஜா குறிப்பிட்டுள்ளார்.

பழனி, திருச்செந்தூர், திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம், இராமேஸ்வரம், சமயபுரம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில்,வடபழனி முருகன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வருகை தரும் அனைத்து கோயில்களிலும் ஆலய நுழைவு வாயில் அருகே எந்நேரமும் மருத்துவர் மற்றும் செவிலியர் குழு அடங்கிய மருத்துவ முதலுதவி சிகிச்சை மையம் ஒன்றை அமைக்க இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

பணம் வசூலிப்பதில் காட்டும் அக்கறையை பக்தர்களின் உயிர் மீதும் காட்ட இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் தமிழகத்தில் உள்ள ஆலயங்கள் அனைத்திலும் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தேவையான சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடிநீர், கழிப்பறை வசதி, நல்ல காற்றோட்டமான சூழ்நிலை மற்றும் மின் விசிறிகள் அமைத்து முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் குழந்தைகள் அமர ஆங்காங்கே இருக்கைகள் அமைத்து அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என எச். ராஜா வலியுறுத்தியுள்ளார்.

Tags: The Hindu Religious Endowments Department is only interested in exploiting temple income: H. Raja alleges!
ShareTweetSendShare
Previous Post

திருப்பூர் : மனைவியை காணவில்லை என குடிபோதையில் வீடியோ வெளியிட்ட காவலர்!

Next Post

அதிக வரி செலுத்தும் பிரபலம் : அமிதாப் முதலிடம்!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

Load More

அண்மைச் செய்திகள்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies