திருச்சி உள்ளிட்ட 11 விமான நிலையங்கள் தனியாருக்குக் குத்தகைக்கு விட அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் முரளீதர் மோஹோல் கூறினார்.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்,
திருச்சி, அமிர்தசரஸ், வாரணாசி, புவனேஸ்வர், ராய்ப்பூர் விமான நிலையங்கள் மற்றும் 6 சிறிய விமான நிலையங்களின் இயக்கம், நிர்வாகம் மற்றும் மேம்பாட்டு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க அடையாளம் காணப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அரசு மற்றும் தனியார் பங்கேற்பு திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மத்திய இணை அமைச்சர் முரளீதர் மோஹோல் கூறினார்.