இலங்கை கடற்படையைக் கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைக் கண்டித்து இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
இதனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல், கரையோரங்களில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. போராட்டம் காரணமாக இரண்டு கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.