விதிகளை மாற்றும் BCCI : குடும்பத்தினருடன் பயணம் - கிரிக்கெட் வீரர்களுக்கு OK!
Jan 14, 2026, 12:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

விதிகளை மாற்றும் BCCI : குடும்பத்தினருடன் பயணம் – கிரிக்கெட் வீரர்களுக்கு OK!

Murugesan M by Murugesan M
Mar 20, 2025, 12:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்வதேச சுற்றுப் பயணங்களின்போது, இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள், தங்கள் குடும்பத்தினரை அழைத்துச் செல்லும் வகையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் விதிகளைத் தளர்த்த உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில், இந்திய கிரிக்கெட் அணி மோசமாக  தோல்வி அடைந்தது.  ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்குப் பிறகு, இந்திய அணி மற்றும் துணை ஊழியர்களுக்கு பிசிசிஐ  புதிய   வழிகாட்டுதல்களை அறிவித்தது.

வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தின் போது ஒரு வீரருடன் குடும்ப உறுப்பினர்கள் வருவதற்கான கால வரம்பையும் பிசிசிஐ நிர்ணயித்தது. அதன்படி, 45 நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட பயணத்துக்கு, ஒரு வீரருடன் அவரது குடும்பத்தினர் இரண்டு வாரங்களுக்கு மேல் தங்க அனுமதி கிடையாது.

சமீபத்தில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபியில், குடும்ப உறுப்பினர்கள் ஒரு போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கும் வகையில் பிசிசிஐ விதியைத் தளர்த்தியது. இதன் காரணமாக, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்தை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாகக் கோப்பையை வென்றது.

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியின் போது, விராட் கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும், கேப்டன் ரோஹித்தின்மனைவியான ரித்திகா சஜ்தேவும் மைதானத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், Royal Challengers Innovation Lab Indian Sports மாநாட்டில் விராட் கோலி கலந்து கொண்டு உரையாற்றினார். வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்ளும் நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் நீண்ட நாட்கள் தங்கள் குடும்பத்தைப் பிரிந்திருக்க வேண்டியுள்ளது. இதனால், கிரிக்கெட் வீரர்களுக்குக் கடுமையான மன அழுத்தங்கள் ஏற்படுவதாகத் தெரிவித்திருந்தார்.

எந்த வீரரும் சுற்றுப்பயணத்தின்போது மோசமாக விளையாடிய பிறகு தனியாக உட்கார்ந்து அழ விரும்ப மாட்டார்கள் என்றும் கூறிய விராட் கோலி, எந்த நேரத்திலும் குடும்பத்துடன் நேரம் செலவிடும் வாய்ப்பை இழக்க விரும்பவில்லை என்று கூறியிருந்தார்.

மேலும், உண்மையான வழியில்,  தங்களின் கடமை,பொறுப்பை முடித்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பி,   குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கவே எல்லோரும் விரும்புவதாக விராட் கோலி குறிப்பிட்டிருந்தார்.

குடும்பத்தினர் உடன் இல்லாமல் நீண்ட நாட்கள் போட்டிக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் கிரிக்கெட் வீரர்கள் சந்திக்கும் உளவியல் பிரச்சனைகளை விராட் கோலியின் கருத்துக்கள் வெளிச்சம் போட்டுக் காட்டின.

தற்போதைய பிசிசிஐ கொள்கையின்படி, சுற்றுப்பயணங்களின்போது குடும்பத்தினரின் வருகை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தொடர், இடம் மற்றும் அட்டவணை தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டுப்பாடுகள் அமைக்கப் பட்டுள்ளன.

இந்நிலையில், விளையாட்டு வீரர்களின் மன சங்கடத்தை  விராட் கோலி வெளிப்படுத்தி இருப்பதால், பிசிசிஐ தனது கொள்கை விதிகளை மறுபரிசீலனை செய்ய  உள்ளதாகக் கூறப் படுகிறது.

இது குறித்து, அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை என்றாலும், குடும்பத்தினரை நீண்ட நாட்கள் தங்களுடன் தங்க வைக்க  விரும்பும் வீரர்கள், முன் கூட்டியே விண்ணப்பித்துச் சிறப்பு அனுமதி பெற வேண்டும்   என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐசிசி போட்டிகள் மற்றும் இருதரப்பு தொடர்கள் உட்பட சர்வதேச கிரிக்கெட் அட்டவணை நிரம்பியிருப்பதால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் இந்த முடிவு, இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்களுக்கு உற்சாகத்தைத் தேவையான மன உறுதியைக் கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

Tags: BCCIindian cricket teamBCCI changes rules: Travelling with family OK for cricketers!
ShareTweetSendShare
Previous Post

ரீல்ஸ் மோகத்தில் கைதான இளைஞர்கள்!

Next Post

கேரளாவிலிருந்து தெரு நாய்களைத் தமிழக எல்லையில் விட முயன்றவர்களை பிடித்த பொதுமக்கள்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies