தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை!
Jun 29, 2025, 06:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை!

Web Desk by Web Desk
Mar 19, 2025, 07:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 2023-ம் ஆண்டு கடலில் எண்ணெய் படலம் பரவிய விவகாரத்தில் இழப்பீடு வழங்கக்கூறி சென்னை பெட்ரோலிய கழகத்துக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவுக்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.

சென்னையில் கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த அதிகனமழையின்போது மணலி பகுதியில் உள்ள சென்னை பெட்ரோலிய கழக நிறுவனம் அருகில், பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக கடலில் எண்ணெய் படலம் பரவியது.

இதனால் அப்பகுதியில் மீன்கள் செத்து மிதந்ததுடன், மக்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு 73 கோடியே 68 லட்சம் ரூபாய் இழப்பீடாக செலுத்தும்படி சென்னை பெட்ரோலிய கழகத்துக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை பெட்ரோலிய கழகம் தாக்கல் செய்த வழக்கு, தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, எண்ணெய் கசிவு குறித்து ஐ.ஐ.டி இன்னும் அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது நியாயமற்றது என சென்னை பெட்ரோலிய கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இழப்பீடாக 19 கோடி ரூபாயை வங்கி உத்தர வாதமாக 4 வாரங்களில் செலுத்த சென்னை பெட்ரோலிய கழகத்துக்கு ஆணையிட்ட தீர்ப்பாயம், மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவுக்கு தடை விதித்தது.

Tags: National Green Tribunal stays Tamil Nadu Pollution Control Board order!தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை
ShareTweetSendShare
Previous Post

சிவகங்கையில் டாஸ்மாக் கடையின் முன் ஒட்டப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படம்!

Next Post

விண்வெளியில் வியத்தகு சாதனை : சிகரம் தொட்ட சிங்கப்பெண்!

Related News

கூட்டணிக்குள் குழப்பம் – திக்குமுக்காடும் திமுக!

காஷ்மீர் அல்லாத வரைபடம் – காங்கிரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

சாலை விரிவாக்கத்திற்கு அகற்றப்பட்ட குடியிருப்புகள் : பரிதவிக்கும் மக்கள்!

திமுக தான், பாமகவிற்கு எதிரி : அன்புமணி திட்டவட்டம்!

பிளவக்கல் அணை பூங்காவின் சீரமைப்பு பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் : மக்கள் கோரிக்கை!

கூமாபட்டி இன்ஸ்டாகிராம் வீடியோ எதிரொலி : சுற்றுலா பயணிகள் செல்ல தடை – பொதுப்பணித்துறை அறிவிப்பு! 

Load More

அண்மைச் செய்திகள்

பறக்கும் துப்பாக்கி – அசத்தும் இந்தியா!

ரஷ்யாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக் : இந்தியாவுக்கு Sukhoi Su-57E போர் விமான தொழில்நுட்பம்!

இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா உடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!

பிரதமர் மோடிக்கு தர்ம சக்ரவர்த்தி பட்டம் வழங்கி கவுரவிப்பு!

கேரள மின்வாரிய துறையின் கார் மோதி பாதசாரி உயிரிழப்பு!

உலகின் அதிவேக இண்டெர்நெட் வசதியை கண்டுபிடித்த ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள்!

கமேனியை நன்றியற்றவர் என்று விமர்சித்த டொனால்ட் டிரம்ப்!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

தாய்லாந்து பிரதமர் பதவி விலகக்கோரி பாங்காக்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டம்!

நடு வழியில்தொழில்நுட்பக் கோளாறு – சீன விமானம் அவசர தரையிறக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies