வெம்பக்கோட்டை 3-ஆம் கட்ட அகழாய்வில் முதல்முறையாக ஈயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் விஜய கரிசல் குளத்தில் 3-ஆம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இதுவரை சங்கு வளையல்கள், கண்ணாடி மணிகள், சுடுமண் குவளைகள் என 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தற்போது நடைபெற்று வரும் அகழ்வாய்வில் புதிதாக சுடு மண்ணாலான அலங்கரிக்கப்பட்ட பதக்கம், இரும்பு ஆகியவை கிடைத்துள்ளன. மேலும், முதல்முறையாக ஈயம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.