நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் சாயப்பட்டறை உரிமையாளர்களைப் போலி பத்திரிகையாளர்களும், போலி சமூக ஆர்வலர்களும் பணம் கேட்டு மிரட்டுவதாகக் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகப் பேட்டியளித்த சாயப்பட்டறை உரிமையாளர்கள், பதிவு செய்யப்படாத சில அமைப்பினர் 15 லட்சம் ரூபாய் வரை பணம் கேட்டு மிரட்டுவதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், போலி பத்திரிக்கையாளர்களும் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.