நாக்பூரில் வெடித்த வன்முறை : மூளையாக செயல்பட்ட முக்கிய நபர் கைது!
Sep 6, 2025, 07:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நாக்பூரில் வெடித்த வன்முறை : மூளையாக செயல்பட்ட முக்கிய நபர் கைது!

Web Desk by Web Desk
Mar 21, 2025, 01:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாக்பூர் வன்முறை தொடர்பாக   ஃபாஹிம் கான் என்பவரை மகாராஷ்டிரா காவல்துறை கைது செய்துள்ளது. அவரது பின்னணியைப் பற்றிப் பார்க்கலாம்.

இஸ்லாமிய மன்னர் ஔரங்கசீப் கல்லறையை அகற்றக் கோரி, விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகள் கடந்த திங்கட் கிழமை  நாக்பூரில் போராட்டம் நடத்தின. இந்த போராட்டத்தில், மதநூல் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியதால் வன்முறை வெடித்தது.

கிட்டத்தட்ட 1,000 பேர் தெருக்களில் இறங்கி கலவரத்தில் ஈடுபட்டனர்.  இது பெரிய அளவிலான வன்முறைகளுக்கு வழிவகுத்தது. போக்குவரத்து ஸ்தம்பித்தது. கற்கள் வீசப்பட்டன. தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன. ஜேசிபி உட்பட ஏராளமான வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப் பட்டன. கடைகள் அடித்து நொறுக்கப் பட்டன. வீடுகள் சேதப் படுத்தப் பட்டன. காவல்துறையினரைத் தாக்க வன்முறைக் கும்பல் கோடாரிகள் மற்றும் பெட்ரோல் குண்டுகள் போன்ற ஆபத்தான  ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த வன்முறைச் சம்பவத்தில், 3 காவல் துறை துணை ஆணையர்கள். காவலர்கள் உட்பட  34 பேர் படுகாயமடைந்தனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் வன்முறை கும்பல்   பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த வன்முறை தொடர்பாக,6 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. கல்வீச்சு, தீவைப்பு சம்பவங்களில் ஈடுபட்டதாக, இதுவரை 54 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

இதற்கிடையே, நாக்பூர் வன்முறைக்குத் தலைமை தாங்கிய முக்கிய குற்றவாளியான ஃபாஹிம் ஷமிம் கான் என்பவரை காவல்துறை கைது செய்துள்ளது.

38 வயதான ஃபாஹிம் ஷமிம் கான், நாக்பூரில் சிறுபான்மையினர் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினராக உள்ளார். முகமது ஹமீத் இன்ஜினியர் தலைமையிலான இமான் தன்ஸீமின் அரசியல் பிரிவாக இந்த கட்சி   2009 ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது.   கடந்த  மக்களவைத் தேர்தலில் நாக்பூரில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரிக்கு எதிராகப் போட்டியிட்டார். ஆனால் வெறும் 1000 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

நாக்பூர் வன்முறைகளுக்கு மூளையாகச் செயல்பட்ட கான் கைது செய்யப்பட்டுள்ளார். வன்முறையைத் தூண்டியதாகவும், புனித நூல் சேதப்படுத்தப்பட்டதாக வதந்திகளைப் பரப்பியதாகவும் பாஹிம் கான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முதலில் கணேஷ் பெத் காவல் நிலையம் அருகிலும், பின்னர் மஹால் பகுதியில் உள்ள ஒரு மசூதியிலும் இஸ்லாமியர்களை ஒன்று கூட கான் வலியுறுத்தினார். இந்த இரண்டு இடங்களிலும் தான் வன்முறைகள் வெடித்துள்ளன.  இந்து அமைப்புக்களின் போராட்டத்துக்குப் பின், அவர்கள் மீது  சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி,  கானின் ஆதரவாளர்கள் கணேஷ்பேத் காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளனர். அதற்குப் பின்னரே வன்முறை நடந்துள்ளது எனக் காவல் துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கான் மக்களைத் தூண்டிவிட்டார், வன்முறையைத் தூண்டினார், மேலும் ஒரு புனித நூல் அவமதிக்கப்பட்டதாக வதந்திகளைப் பரப்புவதில் பங்கு வகித்தார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

Tags: நாக்பூரில் வெடித்த வன்முறைViolence breaks out in Nagpur!: The main culprit who acted as the mastermind is arrested!முக்கிய குற்றவாளி கைது
ShareTweetSendShare
Previous Post

திருவள்ளூர் : இளைஞர் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை!

Next Post

கூடலூர் வனக்கோட்டத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நிறைவு!

Related News

திருப்பதி அருகே விண்வெளி நகரம் – ஆந்திர முதலவர் சந்திரபாபு நாயுடு தகவல்!

அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்களுக்காக நிவாரண தொகுப்பு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

போகுதே போகுதே…இந்தியாவையும், ரஷ்யாவையும் இருள் சூழ்ந்த சீனாவிடம் இழந்து விட்டதாக ட்ரம்ப் புலம்பல்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பான புத்தகம் – தலைமை தளபதி உபேந்திர திவேதி வெளியிட்டார்

தகர்ந்த ட்ரம்பின் உலக ஆதிக்க கனவு : மோடியின் ராஜதந்திரம் – வியக்கும் தலைவர்கள்!

வெளுத்து வாங்கும் மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பிரதமர் மோடி ஆய்வு நடத்த உள்ளதாக தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக அமைச்சர்களின் சொத்துப்பட்டியல் : 5-வது இடத்தில் உதயநிதி ஸ்டாலின்!

எதிர்கால போருக்கு இந்தியா ரெடி : வெகு ஜோராக நடக்கும் நவீன தளவாட உற்பத்தி!

”ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடரும்” : யாரும் கட்டளையிட முடியாது – நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் – கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?

ரஷ்யாவுக்கு ட்ரம்ப் ஆதரவு? : நேட்டோவை கை கழுவ திட்டம் – சிக்கலில் ஐரோப்பிய பாதுகாப்பு!

பிரதமர் பயணத்தால் ஒப்பந்தம் கையெழுத்து : மணிப்பூரில் முடிவுக்கு வருகிறது இனமோதல்!

தத்தளிக்கும் தொழில் நிறுவனங்கள் : மின் கட்டணத்தை குறைக்குமா தமிழக அரசு?

பயிற்சியாளருக்கு குருதட்சணை : பாண்ட்யா சகோதரர்களின் கருணை உள்ளம்…!

அடிப்படை வசதி எங்கே? : துயில்கொள்ளும் மாநகராட்சி – தீராத துயரத்தில் பயணிகள்!

மந்த கதியில் பொருநை அரசு அருங்காட்சியக பணிகள் : துரித நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies