நாக்பூரில் வெடித்த வன்முறை : மூளையாக செயல்பட்ட முக்கிய நபர் கைது!
Mar 15, 2026, 02:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நாக்பூரில் வெடித்த வன்முறை : மூளையாக செயல்பட்ட முக்கிய நபர் கைது!

Murugesan M by Murugesan M
Mar 21, 2025, 01:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாக்பூர் வன்முறை தொடர்பாக   ஃபாஹிம் கான் என்பவரை மகாராஷ்டிரா காவல்துறை கைது செய்துள்ளது. அவரது பின்னணியைப் பற்றிப் பார்க்கலாம்.

இஸ்லாமிய மன்னர் ஔரங்கசீப் கல்லறையை அகற்றக் கோரி, விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகள் கடந்த திங்கட் கிழமை  நாக்பூரில் போராட்டம் நடத்தின. இந்த போராட்டத்தில், மதநூல் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியதால் வன்முறை வெடித்தது.

கிட்டத்தட்ட 1,000 பேர் தெருக்களில் இறங்கி கலவரத்தில் ஈடுபட்டனர்.  இது பெரிய அளவிலான வன்முறைகளுக்கு வழிவகுத்தது. போக்குவரத்து ஸ்தம்பித்தது. கற்கள் வீசப்பட்டன. தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன. ஜேசிபி உட்பட ஏராளமான வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப் பட்டன. கடைகள் அடித்து நொறுக்கப் பட்டன. வீடுகள் சேதப் படுத்தப் பட்டன. காவல்துறையினரைத் தாக்க வன்முறைக் கும்பல் கோடாரிகள் மற்றும் பெட்ரோல் குண்டுகள் போன்ற ஆபத்தான  ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த வன்முறைச் சம்பவத்தில், 3 காவல் துறை துணை ஆணையர்கள். காவலர்கள் உட்பட  34 பேர் படுகாயமடைந்தனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் வன்முறை கும்பல்   பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த வன்முறை தொடர்பாக,6 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. கல்வீச்சு, தீவைப்பு சம்பவங்களில் ஈடுபட்டதாக, இதுவரை 54 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

இதற்கிடையே, நாக்பூர் வன்முறைக்குத் தலைமை தாங்கிய முக்கிய குற்றவாளியான ஃபாஹிம் ஷமிம் கான் என்பவரை காவல்துறை கைது செய்துள்ளது.

38 வயதான ஃபாஹிம் ஷமிம் கான், நாக்பூரில் சிறுபான்மையினர் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினராக உள்ளார். முகமது ஹமீத் இன்ஜினியர் தலைமையிலான இமான் தன்ஸீமின் அரசியல் பிரிவாக இந்த கட்சி   2009 ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது.   கடந்த  மக்களவைத் தேர்தலில் நாக்பூரில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரிக்கு எதிராகப் போட்டியிட்டார். ஆனால் வெறும் 1000 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

நாக்பூர் வன்முறைகளுக்கு மூளையாகச் செயல்பட்ட கான் கைது செய்யப்பட்டுள்ளார். வன்முறையைத் தூண்டியதாகவும், புனித நூல் சேதப்படுத்தப்பட்டதாக வதந்திகளைப் பரப்பியதாகவும் பாஹிம் கான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முதலில் கணேஷ் பெத் காவல் நிலையம் அருகிலும், பின்னர் மஹால் பகுதியில் உள்ள ஒரு மசூதியிலும் இஸ்லாமியர்களை ஒன்று கூட கான் வலியுறுத்தினார். இந்த இரண்டு இடங்களிலும் தான் வன்முறைகள் வெடித்துள்ளன.  இந்து அமைப்புக்களின் போராட்டத்துக்குப் பின், அவர்கள் மீது  சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி,  கானின் ஆதரவாளர்கள் கணேஷ்பேத் காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளனர். அதற்குப் பின்னரே வன்முறை நடந்துள்ளது எனக் காவல் துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கான் மக்களைத் தூண்டிவிட்டார், வன்முறையைத் தூண்டினார், மேலும் ஒரு புனித நூல் அவமதிக்கப்பட்டதாக வதந்திகளைப் பரப்புவதில் பங்கு வகித்தார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

Tags: நாக்பூரில் வெடித்த வன்முறைViolence breaks out in Nagpur!: The main culprit who acted as the mastermind is arrested!முக்கிய குற்றவாளி கைது
ShareTweetSendShare
Previous Post

திருவள்ளூர் : இளைஞர் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை!

Next Post

கூடலூர் வனக்கோட்டத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நிறைவு!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

Load More

அண்மைச் செய்திகள்

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies