மேட்டுப்பாளையத்தில் உள்ள எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் வீட்டில் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், ஒருவரை கைது செய்தனர்.
அண்ணாஜீராவ் சாலையில் வசித்து வரும் எஸ்டிபிஐ நிர்வாகிகள் 3 பேர் வீட்டில் காலை 8 மணிக்கு அமலாக்கத்துறை சோதனை தொடங்கியது. சிஆர்பிஎப் படையினரின் பாதுகாப்புடன் 3 குழுக்களாக பிரிந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் வாஹித் ரகுமான் என்பவரது வீட்டில் மட்டும் இரவு 7 மணி வரை சோதனை தொடர்ந்த நிலையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து வாஹித் ரகுமானை கைது செய்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.