திண்டுக்கல்லில் பெண் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்துக் காவல் நிலையத்தை பாஜகவினர் முற்றுகையிட்டனர்.
கொட்டப்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் பாஜக பெண் நிர்வாகிகள் முதலமைச்சரின் படத்தை ஒட்டினர்.
இதையடுத்து பெண் நிர்வாகிகள் 2 பேர் மீதும் காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர். இதற்குக் கண்டனம் தெரிவித்த பாஜகவினர், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.