இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மீன் பிடி துறைமுகத்திலிருந்து ஒரு நாட்டிகள் தூரத்தில் நடுக்கடலில் பைபர் படகில் இலங்கை மீனவர்கள் இருவர் தத்தளிப்பதாகக் கடலோர காவல்படை காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
இருவரையும் மீட்டு காவல்துறை நடத்திய விசாரணையில் அவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஞானராஜ் மற்றும் பூலோக தாசன் என்பதும் படகில் கஞ்சா பொட்டலங்களுடன் கரை ஒதுங்கியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.