நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்தில் இந்தாண்டிற்கான பறவைகள் கணக்கெடுக்கும் பணி நிறைவடைந்தது.
நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிக்காக 20 பகுதிகளும், நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிக்காக 23 இடங்களும் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றன.
கணக்கெடுப்பின்படி, 135 நீர் வாழ் பறவைகளும், 3 ஆயிரத்து 23 நிலவாழ் பறவைகளும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பறவைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.