அமெரிக்காவின் மத்திய மேற்கில் உள்ள இண்டியானா மாகாணத்தில் EF-1 சூறாவளி தாக்கியதில், ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்தன.
குறிப்பாக கேரி பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியின் கூரை சூறாவளியால் சேதமடைந்தது. ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்து, வீடுகளும் குறிப்பிடத்தக்கச் சேதத்தைச் சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.