18-வது ஐபிஎல் தொடர் நேற்று தொடங்கிய நிலையில், முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணியை பெங்களூரு அணி வீழ்த்தியது.
கொல்கத்தாவில் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. கொல்கத்தா – பெங்களூரு அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்தது. பின்னர் 175 இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 16.2 ஓவரில் 3 விக்கெட் இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வீராட் கோலி 59 ரன்னும், சால்ட் 56 ரன் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.