முட்டைக்காக கையேந்தும் அமெரிக்கா - கைகழுவிய ஐரோப்பிய நாடுகள்!
May 9, 2025, 07:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முட்டைக்காக கையேந்தும் அமெரிக்கா – கைகழுவிய ஐரோப்பிய நாடுகள்!

Web Desk by Web Desk
Mar 23, 2025, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் முட்டை விலை உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் முட்டை பற்றாக்குறை ஏற்பட என்ன காரணம் ? எப்படி சமாளிக்கப் போகிறது அமெரிக்கா என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

வரிவிதிப்பு என்ற ஆயுதத்தை வைத்துக் கொண்டு, அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கெல்லாம் அதிக வரி விதிப்பது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செயல்பட்டு வருகிறார். கனடா, மெக்சிகோ, சீனா மீது அதிக வரி விதித்த கையோடு பிற நாடுகளுக்கும் பரஸ்பர வரிவிதித்தார் ட்ரம்ப். இப்போது தான் விரித்த வலையில் தானே சிக்கி இருக்கிறார் ட்ரம்ப்.

2022ம் ஆண்டு அமெரிக்க கோழிப் பண்ணைகளில் H5N1 பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. உடனே 50 மாகாணங்களில் உள்ள 1600-க்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. வைரஸ் தாக்கப்பட்ட 200 மில்லியனுக்கும் அதிகமான கோழிகள் கொல்லப்பட்டுள்ளன. கோழிப் பண்ணைகள் முடங்கின. அமெரிக்காவில் பெரிய முட்டை பற்றாக்குறை ஏற்பட்டது.

இதன் விளைவாக முந்தைய ஜோ பைடனின் பதவிக்காலத்தில் முட்டை விலை அதிகரிக்க தொடங்கின. தேர்தல் பிரச்சாரத்தின் போது, முட்டை விலைகளைக் குறைப்பதாக ட்ரம்ப் உறுதியளித்த போதிலும், கடந்த டிசம்பரில் முட்டை விலை 65 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

கடந்த மாதம், முட்டை பற்றாக்குறையை சரிசெய்ய 1 பில்லியன் டாலர், ஒதுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

உயிரியல் பாதுகாப்பை மேம்படுத்த சுமார் 500 மில்லியன் டாலரும், தடுப்பூசிகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக சுமார் 100 மில்லியன் டாலரும், நிவாரண நிதிக்காக 400 மில்லியன் டாலரும் ஒதுக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் முட்டை விலை எக்கசக்கமாக அதிகரித்துள்ளது. ஒரு டஜன் உயர்தர முட்டைகளின் விலை 510 ரூபாயாகும். குறிப்பிட்ட சில பகுதிகளில் ஒரு டஜன் முட்டைகளின் விலை 870 ரூபாய் ஆகும். ஆனால், மெக்சிகோவில் ஒரு டஜன் முட்டைகளின் விலை இப்போதும் சராசரி 2 டாலருக்கும் குறைவாகவே உள்ளது.

முட்டை பற்றாக்குறை காரணமாக, அமெரிக்க சூப்பர் மார்க்கெட்களில், வாடிக்கையாளர்கள் வாங்கும் முட்டை எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ளது. மேலும்,முட்டைகளால் ஆன உணவு ரகங்கள் விற்பனையை ஹோட்டல்கள் நிறுத்தி விட்டன.

கடந்த இரண்டு மாதங்களாகவே பின்லாந்து, டென்மார்க், சுவீடன் மற்றும் நெதர்லாந்து போன்ற பல ஐரோப்பிய நாடுகளுடன் முட்டைகளை அமெரிக்காவுக்கு வழங்குமாறு ட்ரம்ப் கோரிக்கை வைத்திருந்தார்.

முட்டை விலையைக் கட்டுப்படுத்த 10 கோடி முட்டைகளை உடனடியாக இறக்குமதி செய்ய அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது. அமெரிக்காவுக்கு முட்டை ஏற்றுமதி செய்ய முடியுமா என கேட்டு அமெரிக்க வர்த்தக துறை அதிகாரிகள் கனடா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.

தங்கள் பொருட்களுக்கு 25 சதவீதத்துக்கு மேல் ஏற்றுமதி வரி விதித்த அமெரிக்காவை பழிவாங்க இதுவே சரியான நேரம் என கருதிய ஐரோப்பிய நாடுகள், முட்டை விஷயத்தில் பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளன.

அமெரிக்காவுக்கு முட்டைகள் ஏற்றுமதி செய்ய மறுத்துள்ள பின்லாந்து, அமெரிக்காவுக்கு முட்டை ஏற்றுமதி செய்ய தேசிய அனுமதி இல்லை என்றும் கூறியுள்ளது.

Tags: Egg prices in the United Statesegg demand in usus egg demand special storyeurope countries
ShareTweetSendShare
Previous Post

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – சுமார் 4 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

Next Post

மார்ச் 26 பூமிக்கு ஆபத்தா? : அசுர வேகத்தில் வரும் சிறுகோள் – நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

Related News

ஆப்ரேஷன் சிந்தூர் : ஆர்.எஸ்.எஸ்., பாராட்டு!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாக். ராணுவம் தாக்குதல் – சோஃபியா குரேஷி

இந்திய தாக்குதலில் பாக். ராணுவத்திற்கு சேதம் : விக்ரம் மிஸ்ரி

ராணுவ பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம்!

ராணுவ நடவடிக்கைகளை இரவு முழுவதும் கண்காணித்த பிரதமர் மோடி!

பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிப்பு – வீடியோ வெளியீடு!

Load More

அண்மைச் செய்திகள்

ஏடிஎம்கள் அனைத்தும் இயங்குகின்றன : எஸ்பிஐ

36 இடங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் : விங் கமாண்டர் வியோமிகா சிங் 

பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இருக்காது : இந்தியன் ஆயில் நிறுவனம்

இந்திய ராணுவத்தின் நடவடிக்கை பாராட்டுக்குரியது  – திருமாவளவன்

ட்ரோன்கள் இந்திய வான் தடுப்பு அமைப்புகள் மூலம் அழிப்பு : கர்னல் சோபியா குரேஷி

காஷ்மீரில் குருத்வாரா மீது நடந்த தாக்குதலை இந்தியா தான் நடத்தியதாக பாகிஸ்தான் கூறியது ஏமாற்று வேலை : விக்ரம் மிஸ்ரி

மாநில தலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்!

குஜராத் முதலமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டார் பிரதமர் மோடி!

பாகிஸ்தான் எல்லையில் ஒன்பது ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு : பஞ்சாப் அமைச்சரவை முடிவு!

 பஞ்சாப் : வெடிகுண்டை செயலிழக்க வைத்த இந்திய ராணுவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies